tamilnadu

img

அனைத்து கிராமங்களுக்கும் 100 நாள் வேலை வழங்குக! சமம் மகளிர் மாநாடு புதுவை அரசுக்கு கோரிக்கை

புதுச்சேரி, ஜூலை 21- தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேலை வழங்க வேண்டும் என்று சமம் மகளிர் மாநாடு புதுச்  சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் புதுச்  சேரி வெள்ளிவிழா மாநில மாநாடு ஞாயிற்று கிழமை நடைபெற்றது. சமம் இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்ற இம் மாநாட்டில் பொதுச் செயலாளர் சிவகாமி செயல்அறிக்கையை தாக்கல் செய்தார். பொருளாளர் மாரிமுத்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மருத்துவர் டி. சுந்தரராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாநாட்டு துவக்க நிகழ்ச்சி யாக ‘பெண் உரிமையை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. சமம் இயக்க ஆலோசகர் தட்சணா மூர்த்தி தலைமை தாங்கினார். புதுச்சேரி சமூக  நலத்துறை அமைச்சர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில  கௌரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், திரைக் கலைஞர் ரோகிணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  தலைவர் எஸ்.வாலண்டினா உரையாற்றினர். மாநாட்டு துவக்க நிகழ்ச்சியாக சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து ஊர்வலத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதாசுந்தரராமன் துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள்
இம் மாநாட்டில் சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் புதுச்சேரி தலைவராக அன்பரசி ஜெயக்குமார், செயலாளராக மாரிமுத்து, பொருளாளராக சிவகாமி  நிர்வாகிகள் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தாமல் நடத்த வேண்டும். சுய  உதவிகுழுக்களுக்கு வழங்கப்படும் கட னுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.  நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் புதுச்சேரி யில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேலையை துவக்க வேண்டும். பெண்க ளுக்கு தனி பேருந்து இயக்க வேண்டும். நியாய விலைகடைகளில் அனைத்து அத்தி யாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.