tamilnadu

img

ஆயுத தளவாட துறையின் நிலங்களை அபகரிக்க திட்டமா?

சென்னை,செப்.8- அரசின் பரிசீலனையில் உள்ள தனியார்மய திட்டத்திற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சகம் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கும், அதன் கீழ் உள்ள 41 தொழிற்சாலைகளுக்கும் உள்ள சொந்தமான நிலத்தின் விவரங்களை கோரியுள்ளது.   பாதுகாப்பு உற்பத்தித் துறை, ஆயுத தளவாட உற்பத்தி துறையிட மிருந்து எவ்வளவு ஏக்கர் அல்லது சதுரமீட்டரில் நிலங்கள் உள்ளன என்ற விவரங்களை அனைத்து அலகுக ளும் தொலைநகல் மூலமாகவோ அல்லது எக்செல் வடிவத்தில் மின்னஞ்சல் மூலமாகவோ திங்க ளன்று மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு பொது மேலாளர்க ளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2017 பிப்ரவரியிலேயே பிரதமர் அலுவலகம் இந்த விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பி, இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் கடிதத்தில் பல்வேறு தகவல்களோடு சொந்தமான நிலங்களின் விவரமும், ஊழியர்களின் எண்ணிக்கையும் கோரப்பட்டுள்ளது.

ஆயுத தளவாட உற்பத்தித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்துறைக்கு சொந்த மாக பல்வேறு மாநிலங்களில் சுமார் 60,000 ஏக்கர் நிலம் உள்ளதென்றும், சில தொழிற்சாலைகள் விவரங்களை தந்து விட்டதென்றும், இன்னும் சில ஆலைகள் விவரங்களை சேகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஒட்டுமொத்த பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தும் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் நிலத்தையும் சேர்த்து சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதென்றும் கூறினார். பாதுகாப்புத் துறையில் இயங்கும் தொழிற்சங்கங்கள் இந்த துறையை கார்ப்பரேட்மயமாக்கும் முயற்சியின் பகுதியே இது எனக் கூறுகின்றனர். 15ஆவது நிதி கமிஷன் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை விற்று பணமாக்கும் யோசனையை முன்வைத்திருக்கிற சூழலில், அதை நிறைவேற்றும் வகையில் இந்த செயல்பாடு ஒத்துப்போகிறது என்றும் கூறினார். ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம், இந்திய தேசிய பாதுகாப்புத் துறை தொழி லாளர் சம்மேளனம் மற்றும் பாரதியா பிரதிராக்ஷா மஸ்தூர் சங்கம் ஆகிய 3 தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சியை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு சொந்த மான நிலங்களை விற்பதற்கான முதல் நடவடிக்கையாகவே இதனைப் பார்க்கின்றனர். இந்த ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 60 ஆயிரம் ஏக்கர் நிலமும் நமது தேசத்தின் சொத்து. இதை யாரும் விற்க முடியாது. கார்ப்பரேட் நிறு வனங்கள் சிலகாலமாக இந்த நிலங்க ளின் மீது ஒரு கண் வைத்திருக்கி றார்கள். குறிப்பாக சொல்ல வேண்டி யது என்னவெனில் இந்த நிலங்களை கொடுத்தவர்கள் சாதாரண ஏழை விவசாயிகளும், அம்மாநில அரசும்தான். நிலங்களை கொடுத்த தன் நோக்கம் நமது நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுத தளவாட தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்று அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் கூறினார். இந்த நிலங்களை யாருக்கும் விற்கக் கூடாது என்று வலியுறுத்திய ஸ்ரீகுமார், பாதுகாப்பு தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இந்த நிலங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம், இதற்கெதிராக ஊழியர்கள் போராடுவார்கள் என்றார். இதை விற்க நாங்கள் அனுமதிக்க முடியாது.  இது எங்கள் தொழிற்சாலைகளை கார்ப்பரேட் மயமாக்குவதற்கான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். நிலம் சம்பந்தமான விவரம் கேட்டதற்கான உடனடி காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை.