உலகிலேயே கல்வியில் சிறந்து விளங்கும் நாடு பின்லாந்து ஆகும். அங்கு அரசுப்பள்ளிகள் மட்டுமே உண்டு. தனியார் பள்ளிகளே கிடையாது. இங்கேதான் அரசாங்கம் நடத்த வேண்டிய கல்வியை தனியார் நடத்துவதும், தனியார் நடத்த வேண்டிய மதுக்கடைகளை அரசு நடத்தவும் செய்கிறது. இது ஒரு நகை முரண் ஆகும். பின்லாந்தில் தாய்மொழி வழிக்கல்வி தான் உண்டு. அங்கே 7 வயதில்தான் பள்ளியில் மாண வரை சேர்க்கின்றனர். வேற்று மொழி பேசும் மாணவர் நூற்றுக்கும் குறைவாக இருந்தாலும் கூட அவர்களுக்கு அவர்கள் மொழி யிலேயே பாடம் நடத்த அந்த நாடே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. உலக மொழி அறிஞர்கள் எல்லாரும் தாய்மொழி வழிக்கல்வி தான் தலைசிறந்தது என்று சொல்கிறார்கள். இதை எல்லோரும் பின்பற்றினால், மாணவர்களுக்கு - சுயசிந்தனை, அறிவில் தெளிவு, கற்பனை வளம், படைப்பாற்றல் திறன் போன்ற அனைத்தும் வளரும் என்பது உறுதியாகும்.
தேசிய கல்விக்கொள்கையின் குறைபாடு கள் பற்றிய குறிப்புரை பட்டியல்:
முதலில் நாட்டை ஆளுவோர் இன்றிய மையாத ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஓர் அரசும்- கல்விக்கு ஒதுக்கும் நிதியை செலவினமாகக் கருதக்கூடாது. மூலதன மாகவே கருத வேண்டும். கல்விக்குழுவில் கல்வியாளர், ஆசிரியர்கள் பங்களிப்பு போதிய அளவில் இல்லை. அட்ட வணை மொழிகளில் மொழி பெயர்த்து வெளி யிடப்படவில்லை. பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவிற்கு ஒரே கல்வி முறை பொருந்தாது.
3,5,8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு மற்றும் 9 முதல் 12 வரை செமஸ்டர் முறைத் தேர்வுகள் போன்றவை, மாணவர்களு க்கு கல்வி மீது வெறுப்பை உண்டாக்கும். 3ஆம் வகுப்பு முதல் பாடங்கள் கற்றல், தொழிற் பயிற்சி கற்றல், மும்மொழி கற்றல் என்பன மாண வர்களுக்கு மிகுந்த சுமையாகும். இதில் நெகிழ்வு தன்மை துளியும் இல்லை. மனஅழுத்தம் தோன்றும். தொழிற்பயிற்சி கற்றல் என்பது குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவம் தான் ஆகும். மருத்துவக் கல்வி கனவு தகர்த்தெறி யப்படும் போது 18 வயதில் தற்கொலை செய்த னர். இனி 3ஆம் வகுப்பு மாணவர் கூட தற்கொலை க்குத் தள்ளப்படுவார்கள்.
உயர்க்கல்வியில் தாய்மொழியை விருப்பப் பாடமாக எடுத்து முடிந்தால் படிக்கலாம், விரும்பி னால் படிக்கலாம் என்பது தாய்மொழியை அழித்து விடும். பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகளிலிருந்து நான்காண்டுகளாக ஆக்கப்படுகிறது. அதனை படிக்கவும் நுழைவுத் தேர்வு என்ற தடைக்கல் போடப்படுகிறது. மேலும் ஆசிரியர் பயிற்சியும் நான்காண்டுகள் ஆக்கப்படுகிறது. இதனால் படிப்பு மற்றும் தேர்விலேயே மாணவரின் ஆயுட் காலம் முடிந்துவிடும்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே மாண வர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். அதாவது ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் போல் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தகுதி குறைந்த கல்லூரி கள் வேறு பல்கலைக்கழகங்களோடு இணைக் கப்படும். அதனால் மாணவர்கள் வெகு தூரம் அலைந்து பட்டப்படிப்பைப் படிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மாணவர் இடை நிற்றல் அதிகரிக்கும் பள்ளிக் கல்லூரிகள் குறைப்பு, பயிற்சி மையங்கள் நிறைப்பு மற்றும் வெகு தூரத்தில் பள்ளி, கல்லூரிகள் என்பன ஏழை மாணவர்க ளுக்கும், கிராமத்து மாணவர்களுக்கும் கல்வி மறுப்பாகவே முடியும்.
ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கு - சக ஆசிரி யர்கள், நிர்வாகத்தார், மாணவர் ஆகியோரால் நற்சான்றிதழ் பெற வேண்டும் என்பது - ஆசிரியர் படித்த படிப்பை அவமானப்படுத்தும் செயலாகும். வெளியிலிருந்து கண்காணிக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் இதில் பங்குண்டு என்பது ஆசிரியர் அனுபவத்திற்கு உரிய மரியாதை அளிக்காது. ஆசிரியர்கள் பணி யில் சேர ‘தகுதித் தேர்வு’ பதவி உயர்வுக்குத் ‘திறனறிவுத் தேர்வு’ போன்றவற்றால் ஆசிரி யர்களின் ஆயுட் காலம் வீணடிக்கப்படுகிறது. தனியார் பள்ளிக் கல்லூரிகளுக்கு நிதியுதவி என்பது மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகும். இது தனியார் வசம் கல்வியைத் தாரை வார்க்கும் செயலேயாகும். மு.அனந்தகிருஷ்ணன் ‘எந்த தரக்கட்டுப்பாடும் தேவையில்லை. வணிகர்க ளும், அரசியல்வாதிகளும் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதைத் தடை செய்தாலே போதும்’ என்கிறார். உலகமயமாதல், தனியார் மயமாதல், தாராளமய மாதல் போன்றவற்றால் வணிகக் கல்வி வரிந்து கட்டிக் கொண்டு நடக்கும். காலனியாதிக்கம் போய் கம்பெனி ஆதிக்கம் வந்துவிடும்.
தேசிய கல்வியமைப்பு (ராஷ்டிரிய சிக் ஷா ஆயோக்) ஒன்று பிரதமர் தலைமையில் அமையுமாம். அதில் உறுப்பினர்களாக மாநில முதல்வர்கள் 30 பேர்கள் சுழற்சி முறையில் சேர்க்கப்படுவார்களாம். 29 மாநிலங்கள் 7 ஒன்றிய பகுதிகள் இருப்பதால் சில மாநில முதல்வர்க ளுக்கு - குறிப்பாக எதிர்க்கட்சி முதல்வர்களு க்கு உறுப்பினர் பதவியே கிடைக்காது. இதிலி ருந்து கல்வியானது- மாநில பட்டியலிலிருந்து அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுப் பட்டியலுக்கு சென்றது. இனிமேல் மத்திய பட்டியலுக்கே சென்று விடும் அபாயம் உள்ளது. இது மத்தியில் எஜமானர், மாநிலத்தில் ஏவலாள் என்ற இழி நிலைக்குத் தள்ளப்படும். 30 கோடி மாணவர்களின் தலையெழுத்து- வலிந்து, பாழாக்கும் வகையில் கிறுக்கப்பட வுள்ளது.
பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி போன்ற முறை சாராக் கல்விமுறை சார்ந்த கல்வியாக்குவது, விளையாடி - தூங்கி மகிழ வேண்டிய குழந்தை களுக்குக் கல்விச் சுமையை அதிகரித்து, அவர்கள் தலையில் ஏற்றும் செயலாகும். மூன்றாவது மொழித் திணிப்பால், மாண வர்களுக்குக் கல்வி இனிக்காது. ஆசிரியரின் மூளையில் உள்ள செய்திகள், கருத்துக்கள்- மாணவர்களின் மூளைக்குள் திணிக்கப்படாமல், இயல்பாக இடமாற்றம் நடக்க வேண்டும். அதுதான் சிறந்த கல்வி முறையாகும். மாநில அரசு தேர்வு ஆணையத்தைத் தனியார் வசம் ஒப்படைப்பது பெரிய அளவில் சீர்கேட்டை விளைவிக்கும்.
கல்விக்கட்டணத்தை இனிமேல் பெட்ரோல், டீசலைப் போல் தனியாரே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதி யளிப்பது- கட்டணம் ஏறுமுகமாகவே இருக்கும். இதற்கு முடிவே இருக்காது. இது ஏழை மாணவ ரை பற்றி கடுகளவு கூட நினையாமையைத்தான் காட்டுகிறது. அனைவருக்கும் சமமான, தரமான, இலவசமான கட்டாயக் கல்வி முறையில்லை. சமமற்ற ஆடுகளத்தில், சீரற்ற ஆட்ட விதி முறைகளுடன் குழந்தைகளை விளையாட விட்டுச் சிலரை தேர்ந்தெடுத்துச் சீராட்டுகிறோம், பாராட்டுகிறோம். மரம் ஏற முடியாத மீன்கள் நீச்சலையும் மறந்து தண்ணீருக்குள் அழுது கொண்டிருக்கின்றன. அவசர கதியில் சர்வாதி காரத்தால் போடப்படும் சட்டங்கள் யாவும் மக்கள் சட்டங்களாகவே இருக்காது, விரைவிலேயே உடைந்து நொறுங்கும் மரச்சட்டங்களாகத்தான் இருக்கும்.
தேசிய கல்விக்கொள்கை 2019 என்ற அறிக்கையில் உள்ள குறைபாடுகளை திருத்த வேண்டியது என்றால், முழுவதுமே திருத்த வேண்டியுள்ளது. ஆகவே அதை திரும்பப் பெற வேண்டும் என்பதே சரியானது, முறை யானது, நியாயமானது. இது புதிய கல்விக்கொள்கை அல்ல- புதிய கல்விக் கொலையாகும்; புதிய கல்விக் கொள்ளையாகும்.
கட்டுரையாளர் : ஓய்வு பெற்ற
தலைமை ஆசிரியர், ராஜபாளையம்.