tamilnadu

img

சட்டப்பூர்வ பென்சன் எமது உழைப்பின் உரிமை - இ.மாயமலை

பொதுச் செயலாளர், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம்

வறுமை, வேலையின்மையால் வாழ்வுக்கு வழி தேடித் திண்டா டிய கிராமப்புற இளைஞர்கள் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் யாருமற்ற அனாதைகளான இளம்பெண்கள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தில் மாதம் ரூ.30, ரூ.50, ரூ.150 என்ற மதிப்பூதி யத்தில் பணியில் சேர்ந்தனர். ஐசிடிஎஸ் மற்றும் ஊட்டச்சத்துத் திட்டமும் இத்துடன் இணைக்கப்பட்டது.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முன்னு ரிமை, நியமன அதிகாரம் மாவட்ட ஆட்சியர் என விதிகள் விதிக்கப்பட்டன. குறளமுது ஆசிரியர், மழலையர் முன்பருவக் கல்வி எனத் துவங்கி அரசின் சிறப்புத் திட்டப் பணிகள் அனைத்தும் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. பற்றாக்குறை ஊதியத்தில் குடும்ப கஷ்டங்களைச் சுமந்து கொண்டு ஆற்றிய இந்த ஊழியர்களின் தன்னலமற்ற உழைப்பால் திட்டம் வெற்றி பெற்றது. உலகம் போற்றியது; உலக வங்கியும் பாராட்டியது. இந்திய அளவில் மதிய உணவுத் திட்டம் விஸ்தரிக்கப்பட முன்னு தாரணமானது. ஆனால் இந்த திட்டத்தின் வெற்றிக்கு உழைத்தவர்களின் வறுமை தீரவில்லை, வாழ்க்கை மேம்படவில்லை. கடும் உழைப்புச் சுரண்டலுக்குள்ளான இவர்கள் 1985 முதல் சங்கம் அமைத்துப் பல நூதன போராட்டங்களை இன்று வரை நடத்தி வரு கின்றனர். சில சொற்பமான ஊதிய உயர்வுப் பலன்கள் பெற்ற போதிலும் முறையான கால முறை ஊதியமும் முறையான ஓய்வூதிய மும் இன்னும் கிடைக்கவில்லை.

1982ல் துவங்கப்பட்ட இத்திட்டத்தில் இளைஞர்களாக, இளம் பெண்களாக வறுமை நிலையில் இப்பணியில் சேர்ந்தோர் ஓய்வுக்குப் பின் முதுமையிலும் வறுமையே நிரந்தரம் என மாறி மாறி வந்த ஆளும் அரசுகளால் ஆக்கப்பட்டனர். இதனால் ஓய்வுக்குப்பின் சிலர் பிச்சை எடுப்பதும் உயிரிழந்தபின் நல்லடக்கச் செலவுக்குக் கூட ஏதுமற்ற அனாதைகளாய் இருப்பதும் நடப்பாக மாறிவிட்டது. சம காலத்தில் மதிப்பூதியப் பணி நிய மனம், NON STANDARD TIME SCALE, சிறப்புக் காலமுறை ஊதியம் என சம தகுதிநிலையில் பணியாற்றி ஓய்வுக்குப் பின் சிறப்பு ஓய்வூதி யம் என ஒரே பெயரில் பென்சன் பெறுவோ ரில் வருவாய்த் துறையில் மட்டும் குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்து வப்படி உள்பட மாத ஓய்வூதியம் ரூ.6750 வழங்கும் தமிழக அரசு சத்துணவுத் திட்டத்துறையில் ரூ.2000 மட்டும் ஓய்வூதி யம் வழங்கி விட்டு வேறு எவ்வித பணப்பல னும் வழங்காதது பாரபட்சமாகும்.

பெரியண்ணன் எதிர் தமிழ்நாடு அரசு (WPNO 14911/2006) சமூக நலத்துறைச் செயலாளர் வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் என்.பால்வசந்தகுமார் சத்துணவுப் பொறுப்பாளர் பணி தமிழ்நாடு அரசின் குடிமைப் பணிக்கான பதிலிப் பணி  என தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேபோல ரமேஷ் கே.சர்மா மற்றும் பிறர் - எதிர்- ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் (AIR 2000 Sc 352 (2001) ISSC 63 வழக்கிலும், சந்திரகா பிரகாஷ் பாண்டே மற்றும் பிறர் - எதிர்- உத்தரப்பிரதேச அரசு (AIR2001 Sc 1298 (2001) 4 ssc 78 வழக்கிலும் உச்சநீதிமன்றம் மதிய உணவுப் பொறுப்பாளர் பணி SUBSTANTIVE POST என்றும் CIVIL POST என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புகள் இன்று வரை மாநில, மத்திய அரசுகளால் மறுக்கப்படவில்லை. எனவே சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அனைவரும் இந்திய அரசமைப்புச் சட்டவிதி 311(2)- ன் கீழ் அரசு ஊழியர்கள் பெறும் ஓய்வூதிய உரிமைகள் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரப் பாதுகாப்பும் பெறத் தகுதியுடையவர்களாவர். எனவே சத்துணவுத் திட்டத்தின் வெற்றிக்காக வாழ்வின் வசந்தத்தை அழித்துக் கொண்டு, அடுப்பின் அனலில் தன்னை வருத்தி உழைப்பை அர்ப்பணித்த சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் ஜன நாயக முறைப்படி முறையான பென்சன், அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம், இலவச பஸ்பாஸ், ஈமக்கிரி யைச் செலவு நிதி உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி மாநில அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு திங்களன்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.