புதுச்சேரி, ஜூன் 2புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ இடங்களுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும்ஞாயிறன்று நடைபெற்றது.ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர, மொத்தமுள்ள 200 இடங்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 பேர் எழுதினர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 280 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியில் மட்டும் 7 தேர்வு மையங்களில், 2 ஆயிரத்து 279 மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.