தயார் நிலையில் 72 ஆய்வகங்கள்
மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் அறிவிப்பு
புதுதில்லி,மார்ச் 17- கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்த சோதனை நடத்த 72 அரசு ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் 49 ஆய்வகங் கள் இந்த வார இறுதியில் தயாராகி விடும் என்றும் கொரோனா தொற்றில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்றைப் பொறுத்த வரை இந்தியா இப்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. மூன்றாம் கட்டம் எனப்படும் சமுதாய தொற்று இந்தியாவில் இதுவரை உரு வாகவில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை நடத்து வதற்கான அனுமதி விரைவில் அளிக்கப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் தற்போது 72 ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 49 ஆய்வகங்கள் இந்த வார இறுதியில் தயாராகி விடும். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர்கள் வீடுகளில் நோய்த்தடுப்புக் காவலில் வைக்கப்பட வேண்டும். அதில் அறி குறிகள் காணப்பட்டால் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். நாட்டில் அதிவிரைவு ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இதனால் ஒரு நாளில் ஆயிரத்து 400 மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும் என்றார். 10 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.