முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67. கடந்த ஆட்சியின் போது மோடி அமைச்சரவையில் பணியாற்றியவர்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செயல்பட்டார். இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து. உடல்நிலை காரணமாக நடந்த முடிந்த மக்களவையில் தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். .
இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகாரத் துறை இலாகாவில் பொறுப்பு வகித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.