tamilnadu

img

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : தில்லி பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் காரணமாக  தில்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  மார்ச் 31 வரை விடுமுறை விட  அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் தாக்கியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 119 நாடுகளில் பரவி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில்  கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்தியர்கள் 56 பேர் மற்றும் வெளிநாட்டினர் 17 பேர் இதில் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாகக் கேரளாவில் 17 பேர், மராட்டியம் 11 பேர், உத்தரப்பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தில்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  மார்ச் 31 வரை விடுமுறை விட  அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திரையரங்குகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.