கடும் எதிர்ப்புக்கு பணிந்து புதிய கல்விக் கொள்கையை கைவிடுமா மத்திய அரசு?
புதுதில்லி, ஆக. 1 - தமிழகம் உள்ளிட்ட மாநில மக்களின் கடும் எதிர்ப்பினை கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை மேலும் வலுத்துள்ளது. தேசிய வரைவு கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்தியக் கல்வியையும் சீர்குலைத்து கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் தெரு முனை கூட்டங்கள், ஒரு கோடி கையெழுத்து இயக்கம் எனும் மாபெரும் இயக்கத்தை ஆகஸ்ட் 11 வரை நீட்டித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வியாழனன்று ஆலோ சனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். அப் போது புதிய கல்விக் கொள்கையில் திருத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும், திரும்பப் பெற வேண்டிய தன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன், பி.ஆர்.நடராஜன், சு.வெங்க டேசன் ஆகியோர் பங்கேற்று கருத்துக் களை பதிவு செய்தனர். மும்மொழிக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை திணிப்பது மட்டு மல்லாமல், ஒட்டுமொத்த இந்தியக் கல்வியையும் முற்றாக வணிகமய மாக்குவது, மத்திய அரசிடம் கல்வி அதிகாரத்தைக் குவிப்பது, மதவெறி மயமாக்குவது ஆகிய மூன்று கொடிய நோக்கங்களுடன் கல்விக் கொள்கை அமைந்துள்ளது; எனவே இதை முற் றாக திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி னர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய திமுக மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி சிவா, இதற்கு முன்பு டி.எஸ்.ஆர் சுப்பிரமணி யம் குழு தாக்கல் செய்த அறிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்தக் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை, ஒருசார்பு கொள்கையாளர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதுதான் அதற்கு காரணம். தற்போது கஸ்தூரி ரங்கன் தனது அறிக்கையில், இது டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் அறிக்கையின் தொடர்ச்சி என்கிறார். நிராகரிக்கப்பட்ட அறிக்கையின் சாயல் இதில் நிறைய இருக்கின்றது” என்று குற்றம்சாட்டினார். புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.