நாமக்கல், ஜூலை 12- பள்ளிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்த டைக்கு வண்ணம் பூச வேண்டும் என்று நகராட்சி நிர்வா கத்திடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித் தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவா ரங்காடு மற்றும் நேரு நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் சாலைகள் சீரமைக்கப்பட்டன.
இச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர வேகத்தடைகள் அமைத்தனர். மேலும், வேகத்தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் இல்லாத தால் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துக் துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை நிர்வா கம் புதுப்பிக்கப்பட்ட சாலைகளில் வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகளை அமைத்திட நகராட்சி நிர்வா கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.பிரபாகரன், துணைத் தலைவர் பூபாலன், தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிபா ளையம் நகராட்சி நிர்வாகித்திடம் மனு அளித்தனர்.