tamilnadu

img

எரிவாயு உருளை விநியோகிப்பாளருக்கு தொழிலாளர்களின் நலச்சட்டங்களை அமல்படுத்திடுக

நாமக்கல், மார்ச் 1- எரிவாயு உருளை விநியோகிப்பாளருக்கு தொழிலா ளர்களின் நலச்சட்டங்களை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் கலந்தாய்வு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.    தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் ஞாயிறன்று பள்ளிபாளையம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில இணைச் செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டார். கூட் டத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைச் சம்பளம், இஎஸ்ஐ மற்றும் ஈபிஎப் ஆகியவை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, நாமக்கல் மாவட்ட செயலாளர்  பூபதிராஜா நன்றி கூறினார்.