தரங்கம்பாடி ஜூன் 13- நாகை மாவட்டம், பெரம்பூர் அருகேயுள்ள கிளியனூரில் இயங்கி வரும் ஐஓபி வங்கியில் குழுக்கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள், முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை பெறுபவர்கள், 100 நாள் வேலை தொழிலாளர்களின் கணக்குகளை திடீரென முடக்கி மக்களை அவதிக்குள்ளாக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து வியாழன் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவ தென மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்து போராட்டம் துவங்க இருந்த நிலையில் வங்கி நிர்வாகம், காவல்துறை மற்றும் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், செல்வநாதன், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின்,சண்முகம், மணிமாறன், குறளரசன் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை யில் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தன் பேரில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் வங்கி நிர்வாகம் அத்துமீறி நடந்து கொண் டால் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.