tamilnadu

img

தொகுதி வளர்ச்சி நிதியை பாஜக அரசு அறிவிக்கவில்லை மயிலாடுதுறை எம்பி பேச்சு

சீர்காழி, ஆக.27-  நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம். கொள்ளிடம் ஒன்றியம் அரசூர், பனங்காட்டான்குடி உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்தியில் அரசு அமைந்து நான்கு மாதம் ஆகிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்கான வளர்ச்சி நிதியை பா.ஜ.க. அரசு இன்று வரை அறிவிக்கவில்லை.  மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இடையூறாக உள்ளன. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், செல்லுமிடமெல்லாம் மக்கள் ஏராளமான கோரிக்கைகளை கூறுகிறார்கள். மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை எல்லாம் எம்பியிடம் கோருகிறார்கள்.  தொகுதி வளர்ச்சி நிதி அறிவிக்கப்ப ட்டவுடன் மக்களின் கோரிக்கைகள் நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன், முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் சேதுரவிக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கலைவாணன், மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசம்பந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் சிவராமன், கொள்ளிடம் திமுக நகர செயலாளர் அமிர்தரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.