சீர்காழி, டிச.10- கொள்ளிடம் ஆற்றங்கரையி லிருந்து மாதிரவேளுர் செல்லும் சாலை யை மேம்படுத்தக் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் வலது கரையிலிருந்து மாதிரவேளுர் செல்லும் 2 கிலோ மீட்டர் தூரச் சாலை மேம்படுத் தப்பட்டு 5 வருடங்களுக்கும் மேலா கிறது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதியடைகின்றனர். சுற்று வட்டார கிராமங்களான கீரங்குடி, சரஸ்வதிவிளாகம், கொன்னக் காட்டுப்படுகை உள்ளிட்ட கிராமங்க ளைச் சேர்ந்தவர்கள் மாதிரவேளுர் சுகாதார நிலையத்திற்கு சென்று வர சிரமம் அடைகின்றனர். பள்ளி மாண வர்கள், வாகனஓட்டிகள் விபத்துக் குள்ளாகின்றனர். எனவே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உள்ள கம்பி போட்ட மதகிலிருந்து மாதிரவேளுர் செல்லும் பழுதடைந்துள்ள 2 கிமீ தூர சாலையை மேம்படுத்த உடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.