tamilnadu

img

உமையாள்பதி- ஆலங்காடு சாலையை மேம்படுத்த கோரிக்கை

 சீர்காழி ஆக 3- சீர்காழி அருகே உமையாள்பதியிலிருந்து ஆலங்காடு செல்லும்சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே உமையாள்பதியி லிருந்து ஆலங்காடு கிராமத்திற்குச் செல்லும் இரண்டு கிமீ தூர தார் சாலை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மேம் படுத்தப்பட்டது. அதன் பின்னர் இதுவரை இந்த தார் சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  உமையாள்பதியிலிருந்து ஆலங்காடு கிராமத்திற்கு வரும் துவக்கப்பள்ளி மாணவர்களும் உமையாள்பதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாகவும், சில இடங்களில் அதிக பள்ளமாகவும் உள்ளதால் நடந்து செல்லும் போது இளை ஞர்கள் முதல் பெரியோர்கள் வரை தடுமாறி கீழே விழுந்து  அடிபடுகின்றனர். மழை பெய்தால் சாலையில் தேங்கும் நீர், வாரக் கணக்கில் வடியாத நிலை ஏற்படுகிறது. விவசாயி கள் வயலுக்குச் செல்லும் போதும் மிகுந்த சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே 15 வருடங்களாக மேம் படுத்தப்படாத உமையாள்பதி-ஆலங்காடு சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது.