tamilnadu

தனியார் நுண்கடன் நிறுவனம் ‘டார்ச்சர்’ மனமுடைந்து பெண் தற்கொலை

தரங்கம்பாடி, டிச.4- தனியார் நுண்கடன் நிறுவனம் ஒன்றில் குழுக்கடன் வாங்கி வார பணம் கட்டாத பெண் ஒருவரை நிறுவன அதிகாரி திட்டியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறை அருகேயுள்ள கிளியனூர் கிராமம் மேலத்தெருவில் வசிக்கும் ரமேஷ் என்ப வரது மனைவி விஜயா(43). இவரும் அதேப்பகுதியில் வசிக்கும் சில பெண்க ளும் இணைந்து அருகேயுள்ள செம்ப னார்கோவிலில் மதுரா என்கிற பெயரில் செயல்படும் தனியார் நுண்கடன் நிறுவனத்தில் வட்டிக்கு பணம் வாங்கி யுள்ளனர். வாரந்தோறும் செவ்வா யன்று அந்நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்படும் அதிகாரி தவணைத் தொகையை பெற்று செல்வது வழக்கமாக இருந்தது. செவ்வாயன்று விஜயாவிடம் தவ ணைத்தொகை 1500 ரூபாய் இல்லை என அறிந்த நிறுவன அதிகாரி அநாக ரிகமாக திட்டியுள்ளார். இதனால் மன முடைந்த விஜயா தற்கொலை செய்து கொண்டார். பெரம்பூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குத்தாலம் ஒன்றியச் செயலாளர் விஜயகாந்த் கூறுகையில், பெரம்பூர், மங்கநல்லூர், எலந்தங்குடி, கிளியனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. பெண்களை குறி வைத்து ஏராளமான தனியார் நுண் கடன் நிறுவனங்கள் பல மடங்கு வட்டி யுடன் கடன் கொடுத்து விட்டு ரவுடியைப் போல மிரட்டி வசூலிக்கின்றனர். பெண் களை குழுக்களாக அமைத்து 5 லிருந்து 10 நபர்கள் வரை அக்குழுவில் உறுப்பி னர்களாக சேர்த்து, மொத்தமாக ஒரு தொகையை கடனாக அளித்து வாரம் ஒரு கிழமையில் 1500 லிருந்து 2500 வரை தொகையை பொறுத்து தவணை முறையில் வசூலிக்கின்றனர்.  குழுவை அமைக்கும் போதே குழுக்களுக்கு தலைவர், செயலர் என பொறுப்புகளை தேர்வு செய்து, அவர் கள்தான் ஒவ்வொரு வாரமும் அனைத்து உறுப்பினர்களிடமும் பணத்தை வாங்க வேண்டும். ஒரு நபரிடம் பணம் இல்லையென்றால் மற்ற உறுப்பினர்கள் அந்த நபருக்கான தொகையை பங்கீட்டு அளிக்க வேண்டும். அதிகாலையிலேயே குழு வாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பணத்தை பெற்றுக் கொள்ள வரும் அதிகாரி வந்த உடன் அனைவரும் எழுந்து வணக்கம் சொல்ல வேண்டும்.  பிறகு வருகை பதிவேடு வாசிக்கப் படும் போது அனைவரும் கட்டாயமாக ஆஜராகியிருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கான பணம் முழு வதும் தந்த பிறகே வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு கலைந்து செல்ல வேண்டும் என்ற அடாவடியான நட வடிக்கைகள் ஒவ்வொரு கிராமத்திலும் நாள்தோறும் காண முடிகிறது.  கடன் தொகைக்கு பல மடங்கு வட்டியுடன் திருப்பி அளித்தாலும் அப்பாவி ஏழை மக்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு நிறு வனங்களும் அடிமையைப் போன்று நடத்தி வரும் சூழலில், கிளியனூரை சேர்ந்த விஜயா என்கிற ஏழை பெண் 1500 ரூபாயை கட்டவில்லை என்ப தற்காக கடன் வசூலிக்க வந்த அந்த நிதி நிறுவனத்தினர் அநாகரிகமாக பேசிய தால் தற்கொலை செய்துள்ளார்.  மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனியார் நுண்கடன் நிறுவனங்களை உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதோடு, உயிரிழப்புக்கு கார ணமான மதுரா நிறுவனத்தின் செம்ப னார்கோவில் கிளையை மூட வேண்டும். விஜயாவின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  இச்சம்பவத்தை கண்டித்து மார்க்சி ஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் விஜயகாந்த் கூறி யுள்ளார்.