தரங்கம்பாடி, ஆக.6- நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரியதாக பல லட்ச ரூபாய்களை முறைகேடு செய்த நகராட்சி ஆணை யர் மற்றும் நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று நகராட்சி அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் ராயர், கோவிந்தசாமி, மணி, ரவீந்திரன், மாசிலாமணி, எம்.மாரி யப்பன், ஏ.ஆர்.விஜய், அறிவழகன், துரைக்கண்ணு, கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள குளங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம்-2019 ன் கீழ் தூர்வாரி விட்டதாக வெறும் அறிவிப்பு பலகைகளை மட்டும் வைத்து விட்டு பல லட்சம் ரூபாய்களை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பாக நீதிமன்றம் அருகேயுள்ள அங்காளம் மன் குளத்தை 2 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரியதாக மதிப்பீட்டு பலகை வைத்துள்ளனர். உடனடியாக கையா டல் செய்யப்பட்ட பணத்தை பெற்று முறையாக தூர்வாரி, மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.