சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லெட்சுமி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வர் செல்வராஜன், வணிக வியல் துறை இளங்கோவன் சிறப்புரையாற்றினர்.வியாபாரத்தை மின்னணு மயமாக்குவ தால் ஏற்படும் வாய்ப்புகளும் விளைவுகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர்கள் சுந்தர், சீனிவாசன், ஓய்வு பெற்ற மதுரை மண்டல நிலவரி உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் நாற்பதுக்கும் மேற்பட்ட பிற கல்லூரி பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர்கள் ராஜசேகர், தம்பிஞானதயாளன் ஆகியோர் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். கருத்தரங்கில் 98 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.