tamilnadu

img

விவசாயிகளுக்கு பாராட்டு...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஆவடி உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து பொது மக்களுக்கு வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் சால்வை அணிவித்து பாராட்டினார். உடன் சென்னை புறநகர் மாவட்டத் தலைவர் வேம்புலி, செயலாளர் முருகன், நிர்வாகி மா.த.பால்ராஜ், சி.பி.எம். பகுதி செயலாளர் ஆர்.ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ம.பூபாளன், சடையன், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.