tamilnadu

குடிசை வீடுகள் எரிந்து நாசம்

சீர்காழி, ஜூன் 14- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார் (28), குப்பன் மகன் ஆறு முகம் (70) ஆகியோர்களின் குடிசை வீடு கள் அருகருகே உள்ளன. இருவரும் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளிகள். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் களின் குடிசை வீடுகளுக்கு மேல் சென்று கொண்டிருந்த மின்கம்பிகள் காற்றில் ஒன்றோடொன்று உரசியதில், வெளி யான தீப்பொறி கூரையின் மீது விழுந்து இரண்டு குடிசைகளும் எரிந்து நாசமாகி யது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர் களின் குடும்பங்களுக்கு சீர்காழி முன் னாள் தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல் வம், ஒன்றியக் குழு தலைவர் ஜெயப்பிர காஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவ பாலன் ஆகியோர் நேரில் சென்று நிதி யுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.