மும்பை:
மராத்தா பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், மகாராஷ்டிரா அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இது கடந்த நவம்பர் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ்கடந்த மே மாதம் ஒப்புதல்வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.