tamilnadu

img

ஆளுநர் போன்ற 'நச்சு செல்கள்' அகற்றப்பட வேண்டும்! - சு.வெங்கடேசன் எம்.பி

ஆளுநர் போன்ற 'நச்சு செல்கள்' அகற்றப்பட வேண்டும் என்று மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி விட்டுவிட்டுப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆளுநர் போன்ற 'நச்சு செல்கள்' அகற்றப்பட வேண்டும் என்று மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தி மாதம், இந்தி வாரம், தினம் ஒரு இந்தி சொல் கற்போம் என தொடர்ந்து இந்தித் திணிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணமான தமிழ்நாட்டு, ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள “இந்தி செல்கள்” அனைத்தும் கலைக்கப்பட வேண்டும்.
தமிழ் உணர்வுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் ஆளுநர் போன்ற 'நச்சு செல்களும்' அகற்றப்பட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.