tamilnadu

img

சும்மாதான் இருக்காங்க

கோடை விடுமுறைக்குப் பிறகு அன்றுதான் பள்ளி திறந்தது. போனாள். ஒன்பது வயது அம்மு, ஆர்வத்துடன் பள்ளிக்குப் புதிதாகப் பணியில் சேர்ந்திருந்த வகுப்பு ஆசிரியை, உங்க பேரு, அப்பாம்மா பேரு, என்ன செய்யிறாங்க, அவளது எல்லாம் நண்பர்கள் சொல்லுங்க!” என்றதும் அவளது நண்பர்கள்  வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். அவளது முறை வந்தபோது, “ என் பேரு அம்மு; அப்பா  குமரன், அஞ்சலக அதிகாரியா வேலை செய்யறாரு; அம்மா  ராகினி வீட்டில சும்மாதான் இருக்காங்க” என்றாள். ஆசிரியர், கொஞ்சம் யோசித்துவிட்டு “சரி, வரும் வார இறுதியில, ஒரே ஒரு நாள், அம்மா போலவே நீயும்  சும்மா இருந்து பாத்துட்டு, அப்புறம் எப்படி இருந்துச்சுன்னு வந்து சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.அவ்வளவுதானே, சும்மா இருப்பதெல்லாம் ஒரு வேலையா என்று அம்மு தலையாட்டி சம்மதித்தாள். அன்று ஞாயிற்றுக் மருத்துவமனையிலிருந்த பாட்டியின் உதவிக்காகச் சென்றிருந்தார். காலையில் எழுந்த அம்மு, துடப்பத்தைக் கையில் எடுத்தாள். பெருக்கி முடித்ததும்தான் சீருடை இருந்தது நினைவுக்கு வந்தது. அழுக்காக வழக்கமாக அம்மா இயந்திரத்தில் போடாமல், கையாலேயே தோய்ப்பார். அப்போதுதான் சீருடை நன்றாக அழுக்கு போகுமாம். அவளும் அதே போல் தோய்த்தாள். தோய்த்து முடித்ததும் பசித்ததால், அக்காவுடன் சேர்ந்து சமைத்தாள். என்ன சமைப்பது என்று முடிவு செய்வதே பெரிய குழப்பமாக இருந்தது.

அதேபோல் சமைத்து, சாப்பிட்டபின் பல தேய்த்துக் பாத்திரங்களைத் கழுவவேண்டியிருந்தது. ஒவ்வொரு வேலையைச் செய்ததும் அடுத்த வேலை வந்தபடியே இருந்தது. அம்முவும் எல்லா வேலையையும் முடித்துவிட்டுத் தூங்கியே போய்விட்டாள். மறுநாள் காலையில் வகுப்பாசிரியை, “விடுமுறை எப்படி இருந்துச்சு?’ என்று கேட்டார். அம்மு, “மே’ம், சும்மா இருக்கிறதுன்னு பேருதான். ஆனா, நாள் முழுக்க மாத்தி மாத்தி வேலை இருந்துச்சு. எங்கம்மா வீட்ல இல்லாததால எல்லாத்தையும் நான்தான் செஞ்சேன். இவ்ளோ வேலைய, எங்கம்மா தினமும் எப்படி தான் செய்யிறாங்களோ!” என்று பெருமூச்சு விட்டாள். ஒரு மாதம் கழிந்தது. பொது அறிவு வகுப்பிற்குப் புதிதாக ஒரு ஆசிரியை வந்திருந்தார். அவரும், ஒ மாணவ அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். மாணவிகளை அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார். வரிசையாக எல்லோரும் சொல்லி வந்தபோது அம்முவின் முறை வந்தது.  “என் பேரு அம்மு. அப்பா குமரன், அஞ்சலக அதிகாரியா  வேலை செய்யறாரு; அம்மா ராகினி” என்றவள், ஒரு வினாடி யோசித்துவிட்டு, “எங்க வீட்டை நிர்வாகம் செஞ்சி, எங்க எல்லாரையுமே நல்லா பாத்துக்கிறாங்க” என்றாள் பெருமையுடன்.  ‘கெட்டிக்காரக் குட்டித் தவளை2.0’ நூலிலிருந்து