மேற்கு ஆசியப் போர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு
, மருந்து கிடைப்பதில் சிக்கல் மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழிப்பாதை கள் மூடப்பட்டுள்ளதாலும், துபாய், தோஹா மற்றும் அபுதாபி போன்ற முக்கிய மையங்களில் இருந்து சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்ப தாலும் உலகளாவிய நெருக்கடி தீவிர மடைந்து வருகிறது. எரிபொருள் மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், போ க்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ளன. மனிதாபிமான உதவி அமைப்புகளின் விநியோகச் சங்கிலியையும் சீர்குலைந் துள்ளது. இதனால் உதவி அமைப்புகள் அதிக செலவு பிடிக்கும் மற்றும் அதிக நேரம் எடுக்கும் மாற்று வழிகளைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. உலக உணவுத் திட்டப் (WFP) பிரிவு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் வழியிலேயே தேங்கிக் கிடப்பதாகத் தெரிவித்துள்ளது. அதே போல சர்வதேச மீட்புக் குழு (IRC), போரி னால் பாதிக்கப்பட்ட சூடானுக்கு அனுப்ப வேண்டிய 1,30,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகள் துபாயிலும், சோமாலியா குழந்தைகளின் ஊட்டச் சத்து உணவுகள் இந்தியாவிலும் முடங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப் படி, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விநியோ கச் சங்கிலி சீர்குலைவு இதுவாகும். இத னால் கப்பல் போக்குவரத்து செலவுகள் 20% வரை அதிகரித்துள்ளன என செய்தி கள் வெளியாகியுள்ளன.