tamilnadu

img

நல்லிணக்கம் கொண்ட தமிழ்நாடு மக்கள் ஏமாற மாட்டார்கள் பாஜகவினரின் போலி பக்தி, அரசியல் நாடகம் எடுபடாது!

நல்லிணக்கம் கொண்ட தமிழ்நாடு மக்கள் ஏமாற மாட்டார்கள் பாஜகவினரின் போலி பக்தி, அரசியல் நாடகம் எடுபடாது!

முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூர், ஜூன் 26 - அதிமுகவையும் சேர்த்துக் கொண்டு, மதத்தால் - சாதியால் மக்களைப் பிளவுபடுத்த பாஜக செய்யும் முயற்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில், வியாழனன்று நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வறுமை, வேலையின்மை பற்றி பாஜகவுக்கு கவலையில்லை மத்தியில் ஆட்சியில் இருப்ப வர்கள், தமிழ்நாட்டு மக்களை மதத்தால் - சாதியால் - பிளவு படுத்த தொடர்ந்து முயற்சி செய்து  வருகிறார்கள். அவர்களால் முடி யாதபோது, இங்கு இருக்கக்கூ டிய அதிமுக கட்சியையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது… மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுகிறது… வேலை வாய்ப்பு இல்லை என்று சொன்னால், பாஜகவும், அதிமுகவும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகிறார்கள்! இதுதான் அவர்களுடைய அரசியல். கடவுள் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜக பேசுகிறார்கள்! உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்ட ணிக்கு தான் ஆபத்து! மிஸ்டு  கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போன வர்கள், தங்களின் அரசியல் லாப த்திற்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டி ருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாட கத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் – பிற மதத்தின ரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த நன்மை என்ன? கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு 3 ஆயிரம் கோயில் களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்! அதேபோல், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவா லயங்களையும் – மசூதிகளை யும் புனரமைக்க நிதி ஒதுக்கி யிருக்கிறோம். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக்  கொண்டு எரிகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சி யைப்பற்றி பேச முடியவில்லை - ஓட்டு கேட்க முடியவில்லை - முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும்! அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் தி.மு.க. ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவிடம் அடமானம்  போன அதிமுக தலைமை ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடு கிறார்கள். பெரியார், அண்ணா,  கலைஞர் இப்படிப்பட்ட தலை வர்களை கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறார்கள்! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும்  கூட்டம்! அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்து விட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத் திருப்பவர்கள்… நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும் – எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் – ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.