நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அள விலான வேலைவாய்ப்பு முகாம் அலு வலக வளாகத்திலேயே நடத்தப்படு கிறது. இதன்படி 14.03.2025 காலை 10 மணியளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சா வூரில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளை ஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்ட தாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள லாம். மேலும் வேலையளிக்கும் நிறு வனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை யத்தில் பதிவு செய்தல் அவசியம். தங்க ளின் சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவ ரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.