tamilnadu

மக்கள் குறையை நேரடியாக கேட்டறியும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்!

மக்கள் குறையை நேரடியாக கேட்டறியும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! 

ஜூலை 15 முதல்வர் துவங்கி வைக்கிறார்!

சென்னை, ஜூலை 5- மக்களின் குறைகளை நேரடியாக  கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.  இந்த அறிவிப்பின்படி, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம்  துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.  இந்த முகாம்களை, கடலூர்  மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில்  ஜூலை 15 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். அதைத்தொடர்ந்து, நவம்பர்  மாதம் வரை அனைத்து மாவட்டங் களிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைக் கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறை களின் சேவைகள் மற்றும் திட்டங்களை  அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்க ளும் நடைபெறும். இந்த முகாம்களில்  நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும்,  ஊரகப் பகுதிகளில் 15 துறை களைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம் களுக்கு வருகை தரும் பொதுமக்க ளின் உடல் நலனைப் பேணும் வகை யில், மருத்துவ சேவைகளை வழங்க,  மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன. முன்னதாக, தன்னார்வலர்கள், ஜூலை 7 முதல் ஒவ்வொரு வீட்டிற் கும் நேரடியாகச் சென்று, முகாம்  நடைபெறும் நாள், இடம் குறித்த  விவரங்கள், அங்கு வழங்கப்பட வுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து,  அவற்றில் பயனடைவதற்கான தகுதி கள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல்  கையேட்டினையும், விண்ணப்பத் தையும் வழங்குவர். இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடு படுத்தப்பட உள்ளனர்.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள - ஆனால் விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின்  அவர்களும் இந்த முகாம் நடை பெறும் நாளன்று முகாமிற்கு சென்று  தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான விண்ணப் பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் களில் மட்டுமே வழங்கப்படும். இம்  முகாம்களில் பெறப்படும் விண்ணப் பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடை பெறும் முகாம்களில் பொதுமக்கள்  அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.