tamilnadu

பாலிடெக்னிக் மாணவர்க்கும் சிறப்பு துணைத் தேர்வு!

பாலிடெக்னிக் மாணவர்க்கும் சிறப்பு துணைத் தேர்வு!

சென்னை, ஜூன் 9-  பாலிடெக்னிக் கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு குறித்த முழு விவரத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணாக்கர்களின் கல்வித் தரத்தை தமிழக அரசு செம்மைப்படுத்தி வருகிறது. ஏழை - எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது. 2025 ஏப்ரலில் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதிப் பருவம், துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அந்த மாணவர்கள்- அடுத்த நிலையான உயர்கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூன், ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுதுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கோவி. செழியன் கூறியுள்ளார்.