கடலூர் ரசாயன தொழிற்சாலையில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து
படுகாயமடைந்த 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
கடலூர், மே 16- கடலூர் அருகே சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் கழிவு நீர் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்ட தில் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கட லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான ரசாயன தொழி ற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வரு கின்றனர். அதன்படி முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் லாயல் சூப்பர் பேபரிக்ஸ் என்ற சாயத் தொழிற் சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்க சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்று உள்ளது. வியாழக் கிழமை (மே 15) அதிகாலை அந்த டேங்க் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த னர். மேலும் டேங்க் வெடித்ததால் வெளி யேறிய தண்ணீர் குடிகாடு கிராமத் திற்குள் புகுந்ததால் அங்கிருந்த மூன்று வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த னர். மேலும் இந்த சம்பவத்தால் கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத் திண றலால் பாதிக்கப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். கழிவுநீர் மிகவும் சூடாக இருந்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கும் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. லாயல் பேபரிக்ஸ் நிறுவனத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் திடீ ரென கடலூர்- சிதம்பரம் சாலைக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் முதுநகர் ஆய்வாளர் கதி ரவன், வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வாயுக்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். மேலும் எங்கள் பகுதி மக்களுக்கும் இந்த நிறு வனத்தில் வேலை தருவதில்லை. இப்பொழுது வெளியேறிய கழிவு நீரால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்க ளுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து போலீசார் நிறுவனத் திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர்களிடம் தெரிவித் தனர். இதை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
சிபிஎம் ஆறுதல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் பார்வையிட்டு ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பக்கிரான், ஸ்டீபன் ராஜ், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் அப்போது உடனிருந்தனர். அதேபோல் திமுக சார்பில் மாவட்ட பொருளாளர் எம். ஆர்.கே.பி.கதிரவன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்ட வர்களை பார்த்து ஆறுதல் கூறினார் கள்.