tamilnadu

img

ஆர்டிஇ ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள்!

ஆர்டிஇ ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள்!

தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மே 21 - கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க முடியாது என தனி யார் பள்ளி நிர்வாகங்கள் கை விரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி ஏழை - எளிய மாணவர் களுக்கான 25 சதவிகித இட ஒதுக் கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி  நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது என்கிற  காரணத்தை முன்னிறுத்தி, ஆர்டிஇ-யின் (RTE)-படி 25 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இதில், தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கட்டாய கல்வி உரிமைச்  சட்டப்படி 25 சதவிகித இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

7 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை

சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய ரூபாய் 2000 கோடிக்கு  மேலான நிதி பங்கீட்டை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வரு கிறது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 7 லட்சம் மாணவர்களுக்கு மேலாக கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை இருக்கிறது.  இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணைய தளத்தை முடக்கி வைத்திருக்கின்றனர்.  

தனியார் பள்ளிகளின்  செயல் நியாயமல்ல!

எனவே, தமிழக அரசு, மாணவர் களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிதியினை வழங்கி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முழுமை யாக மாணவர் சேர்க்கை நடைபெறு வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.  தனியார் பள்ளி நிர்வாகங்களும் 75 சதவிகிதம் மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்கும் நிலையில் அரசு நிதி தாமதமாவதை காரணமாக காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

நிதியை, ஒன்றிய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது

ஒன்றிய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தையே முடக்கும் வகையில் இச்சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் தனியார் பள்ளி நிர்வாகங் களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி மாண வர்களின் கல்வி வாய்ப்பை மறுக்கும் வகையில் நடந்து கொள்வது, வன்மை யான கண்டனத்திற்கு உரியது. ஒன்றிய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதேநேரத்தில், தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர்டிஇ சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.