எத்தனை கோடி கொடுத்தாலும் நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்!
“ஒன்றிய பாஜக அரசு எத்தனை கோடி கொடுத்தாலும், அவர் களது நாக்பூர் திட் டத்தை ஏற்கமாட் டோம்!” என்றும்; “உரிமை போர்க்குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என்றும் செங்கல்பட்டில் நடந்த அரசு விழா வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்தார். ஆணவமாக பேசும் ஒன்றிய அமைச்சர் செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழா வில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது, அவர் பேசி யதாவது: “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சமஸ்கிரு தத்தை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ கத்திற்கு தரவேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயை தருவோம் என்று திமிராக பேசு கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிர தான். தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் புகுத்துகின்ற கொள்கை என்ன வென்று கேட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியையே மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்று தான் நாம் அதை எதிர்க்கிறோம்” என்றார்.
பிளாக் மெயிலுக்கு அஞ்சமாட்டோம் “கல்வியை தனியார்மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வி யில் மதவாதத்தை புகுத்துவது, சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை, அறிவியல், பொறியியல் படிப்பு களுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு, கல்வியில் ஒன்றிய பாஜக அரசின் அதி காரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது. இப்படி நிறைய இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் தேசியக் கல்விக் கொள்கை யை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். ஆனால், “இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும்” என்று பிளாக் மெயில் செய்கிறார் ஒன்றிய கல்வி அமைச் சர் தர்மேந்திர பிரதான். அதனால் தான், ஏற்கனவே உறுதியாக சொன்னேன். திட்ட வட்டமாக சொன்னேன். அழுத்தந்திருத்த மாக சொன்னேன். 2000 கோடி இல்லை, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்ட வட்டமாக நான் சொன்னேன். இந்த மேடை யில் அதைத்தான் மறுபடியும் சொல்கி றேன். உறுதியோடு தெரிவித்துக் கொள்கி றேன்” என்றும் முதலமைச்சர் தெரி வித்தார். ஆணவத்தை அடக்கிய 40 எம்.பி.க்கள் ஒன்றிய பாஜகவின் சக்திகளுக்கு எதி ராக தமிழகம் போராடுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் ,“தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜக வாதிகள் என்று” நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் பேசியி ருக்கிறார்.
ஆனால் பேசிய அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள் நம்முடைய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னு டைய வாழ்த்துக்கள் என்றும்கூறினார். “மானம் அவன் கேட்ட தாலாட்டு - மரணம் அவன் ஆடிய விளையாட்டு” என்று எழுதினார் மறைந்த முதல்வர் கருணாநிதி. அந்தத் தலைவரின் வாரிசுகள் நாங்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காட்டினார்கள். அதுமட்டுமல்ல, அதி முக உறுப்பினர்கள் போல பாஜக அரசு க்கு லாலி பாடிக்கொண்டே இல்லாமல் தமிழகத்தின் உரிமைக்கு யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிரூபித்திருக்கிறார்கள். நாற்பது பேர் சென்று என்ன செய்வார்கள்?” என்று கேட்டவர்களுக்கெல்லாம் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க் குணத்துடன் தமிழகத்துக்குப் போராடு வோம். இதே பொறுப்புணர்வுடன் மக்க ளாட்சியை நடத்துவோம். அதற்கு இப் போது போல் எப்போதும் மக்களான உங்க ளுடைய ஆதரவு தொடர வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, செல்வம், சட்டமன்ற உறுப்பி னர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.