ஸ்ரீவைகுண்டம் தலித் மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்!
ஸ்ரீவைகுண்டம் அருகே தலித் சிறு வன் தேவேந்திரராஜ் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:
சாதிய சக்திகளின் அபாயகரமான ஊடுருவல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகிலுள்ள அரியநாயகி புரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறை யில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சி யை அளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு இந்த கொடூரச் செயலை வன்மையாக கண்டிக்கிறது. தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அண்மைக்கால மாக அதிகரித்து வருகின்றன. குறிப் பாக கல்வி நிலையங்களுக்குள் சாதிய சக்திகளின் ஊடுருவல்களும், பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய வன் கொடுமை தாக்குதல்களும் நிகழ்வது அபாயகரமானதாகும். தாக்குதலுக்கு ஆளான தேவேந்தி ரராஜ் பதினோராம் வகுப்பு படித்து வருபவர். பள்ளிக்கு பேருந்தில் செல் லும் வழியில் தாக்கப்பட்டு இருக்கிறார். இரண்டு கைகளிலும் விரல்கள் வெட் டுப்பட்டுள்ளன. தலையிலும், முதுகி லும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள் ளன. திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.
மாணவர்களிடம் புரையோடி நிற்கும் சாதிய சிந்தனைகள்
கட்டாரிமங்கலம் என்ற ஊரில் நடை பெற்ற கபடி போட்டியில், கெட்டியம் மாள்புரம் அணியை தோற்கடித்து அரிய நாயகிபுரம் அணி வெற்றி பெற்றதே இந்த கொலைவெறித் தாக்குதலின் பின் புலம் என்று தகவல்கள் தெரிவிக்கின் றன. வெற்றி பெற்ற அரியநாயகிபுரத் தின் கபடி வீரர்கள் அனைவரும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை யும், இயல்பாகவே அரியநாயகிபுரம் அணியினர் வெற்றியை கொண்டாடி யதையும் தோற்றுப் போன அணியின ரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய சிந்தனைகள் எந்த அளவிற்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதை இந்த கொடூரமான வன்முறை வெளிப் படுத்துகிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர் நிகழ்வுகளாக மாறி வருவதை அக்கறை யோடும் கவலையோடும் சமூகம் அணுக வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர் சின்னத்துரை தாக்கப்பட் டதையொட்டி நீதிபதி சந்துரு தலைமை யில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப் பட்டு பரிந்துரைகளும் பெறப்பட்டன. அதன்மீது தொடர் நடவடிக்கைகள் உட னடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
பின்புலமாக இருப்போரை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்
தேவேந்திரராஜ் மீது தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைந்து நீதி கிட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சாதிய வெறியூட்ட லுக்கு பின்புலமாக இருக்கிற சாதி ஆதிக்க சக்திகள் கண்டறியப்படுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், உரிய நட வடிக்கைகளுக்கு உட்படுத்தப்படு வதும் அவசரமான தேவை என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு ரிய வகையில் காவல்துறை, உளவுத் துறை செயல்பாடுகளையும் பரிசீலித்து சாதிய பாகுபாடு இல்லாமல் செயல்படு வதையும், இத்தகைய கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.