tamilnadu

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சு:  வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகள் குறித்த தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். உண்மையில், தனது சொந்த தொகுதி யான காட்பாடியில் நடந்த திமுக பொதுக்  கூட்டத்தில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மாற்றுத்திறனாளி களை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தை களை அவர் பயன்படுத்தினார். இதற்கு கடும்  கண்டனம் வலுத்து வந்தது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரி வித்ததோடு வருத்தம் தெரிவிக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தி இருந்தனர். மேலும், பல இடங்களில் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.11)  தன் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித் தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இயற்கையிலேயே உடலில்  ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அரு வருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கலைஞர் கருணா நிதி கருணை உள்ளத்தோடு “மாற்றுத்திற னாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வரு கிறோம். அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத் தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளி களை பழைய பெயரையே கொண்டு உச்ச ரித்து விட்டேன் என்று, திமுக தலைவரும் முத லமைச்சருமான மு.க.ஸ்டாலின் என் கவ னத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப் பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவ றாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண் பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனை யற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள் கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தள விற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத்  தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரி வித்து, இனி இவ்வாறு நிகழாது என்று உறுதி யளிக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.