tamilnadu

img

மின்கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு

மதுரை, ஜூலை 1- கொரணா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்கவேண்டும். கூடு தல் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் வாடிப் பட்டி சோழவந்தான், அய்யங் கோட்டை மின் வாரிய அலுவல கம் முன்பு மனு கொடுக்கும் போரா ட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஏ.வேல் பாண்டி, எஸ்.கந்தவேலு, புரு சோத்தமன், யு.கருப்பசாமி உள் ளிட்டோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் உசிலம்பட்டி மின் பகிர் மான அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு டி.செல்லக்கண்ணு, ஒன்றியச் செயலாளர் பி.ராமர், குமாரசாமி மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். டி.இராமநாதபுரம், சாப்டூர் வடகரைபட்டி, சமயநல்லூர் பவர்ஹவுஸ். தினமணி நகர் மின் வாரிய அலுவலகங்களில் மின்கட் டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.