மிக்ஜாம் புயல் பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர் இன்னும் மீளாத நிலையில், அங்கு யூ.ஜி.சி - நெட் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது:
"ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூ.ஜி.சி - நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது.
மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா? தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.