tamilnadu

img

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு  
சென்னை உயர்நீதிமன்றம் குட்டு!

டாஸ்மாக் நிறு வனத்தில் சோதனை நடத்தியது தொடர் பான விவகாரத்தில், மார்ச் 25 வரை, எந்த மேல் நடவடிக்கை யும் எடுக்கக் கூடாது,  என அமலாக்கத் துறைக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் 8-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது பானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரி மம் வாங்குவது, மதுபானங்களை மது பானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்  கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது  உள்ளிட்டவற்றில் ரூ. 1000 கோடி முறை கேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியல மைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப் புக்கு விரோதமானது, என்றும்; விசாரணை  என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும்  வலியுறுத்தி, டாஸ்மாக் நிர்வாக இயக்கு நர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில் குமார் அமர்  வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங் களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்  டும்; ஆனால் எந்த தகவலும் தெரிவிக்கா மல் அலுவலகத்திற்குள் நுழைந்து அம லாக்கத் துறையினர் சோதனை நடத்தி  இருக்கிறார்கள். விசாரணை என்ற பெய ரில் 60 மணி நேரம் பெண் அதிகாரிகள்  உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்  கத்துறையினர் சிறைப்பிடித்துள்ளனர். இது  தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது?” என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பி னர். அப்போது, அமலாக்கத்துறை சார்பில்  ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல், “இரவில் சோதனை நடத்  தப்படவில்லை” என்றார். உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “பொய்  சொல்ல வேண்டாம். அனைத்துப் பத்தி ரிகைகளிலும் இது குறித்து செய்தி வெளி யாகியுள்ளது. அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் கேள்வி எழுப்புகிறோம்” என காட்ட மாக கூறினர். இது கவலைக்கிடமான சூழ்நிலை  இல்லையா? முழு அரசு அலுவலகத்தை யும் மணிக்கணக்கில் உங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? 3 நாட்  கள் நடைபெற்ற நிகழ்வுகளின் சிசிடிவி காட்சிகள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்  பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதி பதிகள், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.