ஆய்வக நுட்பனர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
சென்னை, ஜூன் 9 - தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், தலைவராக மு. செல்வராணி, பொதுச் செயலாளராக த. ஏழுமலை, பொருளாளராக ஆ. கோபிநாதன் மற்றும் துணைத் தலைவர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலச் செய லாளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஞாயிறன்று (ஜூன் 8) திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு. செல்வராணி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.