tamilnadu

img

காசாவிற்கான உணவுக் கப்பலையும் கடத்திய இஸ்ரேலின் கொடூரம்!

காசாவிற்கான உணவுக் கப்பலையும்  கடத்திய இஸ்ரேலின் கொடூரம்!

பல ஆயிரம் பேர் பட்டினியால் மடியும் அவலம்

காசா, ஜூன் 9 – சுதந்திரக் கடற்படை (Freedom Flotilla Coalition) கூட்டமைப்பின் கப்பலான மட்லீன் என்ற மனிதாபி மானக் கப்பலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடத்தியுள்ளது.  சுதந்திரக் கடற்படை கூட்டணி என்பது உலகம் முழுவதிலும் உள்ள பல மனிதாபிமான அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் ஒரு  கூட்டு முயற்சியாகும். காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. காசா விற்கு மனிதாபிமான உதவிகளை நேரடியாகக் கொண்டு சேர்ப்பது மற்றும் பாலஸ்தீன மக்களுக்கான நீதி,  சுதந்திரத்திற்கான ஆதரவை வழங்கு வதே இவர்களது நோக்கமாகும்.  இஸ்ரேல் ராணுவத்தால் பல மாதங்களாக உணவு தரப்படாமல் காசாவில் பட்டினி போட்டு பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மட்லீன் என்ற கப்பல் ஜூன் 1 அன்று உணவு மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இத்தாலியில் இருந்து புறப்பட்டது.  இக்கப்பலில், காலநிலை மாற்ற செயற்பாட்டாளரான கிரெட்டா துன் பெர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் உள்பட உல கம் முழுவதிலுமிருந்து 12 தன்னா ர்வலர்கள் பயணித்தனர். இவர்களிடம் நிவாரணப்பொருட்களை தவிர எந்த வகையான ஆயுதமும் இல்லை.   இவர்கள் நிவாரணப்பொருட் களை காசாவிற்குள் கொண்டு சென்று விடக்கூடாது என்பதற்காக இஸ்ரேல் ராணுவம் சர்வதேச கடல் எல்லையில் மறித்து தன்னார்வலர்களுடன் கப்ப லை துப்பாக்கி முனையில்கடத்தியுள்ளது.  இது போன்ற கடத்தல் அல்லது கைது நடவடிக்கை நடக்கலாம் என்பதற்காக  கிரெட்டா துன்பெர்க் முன்கூட்டியே ஒரு காணொளியை பதிவு செய்திருந்தார்.  அக்காணொளியில் “இந்த வீடி யோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச கடல் எல்லையில் தடுத்து கடத்தப்பட்டுள்ளோம்,” என்று அர்த்தம் என்று கூறியிருந்தார். அத்துடன், “இஸ்ரேலின் கடத்தலில் இருந்து தன்னார்வலர்கள் குழுவை மீட்க சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என, அவரது நண்பர்கள், குடும்பத்தினர், தோழர் கள் குறிப்பாக, சுவீடன் நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் (துன்பெர்க் சுவீடன் குடியுரிமை பெற்ற வர்) துன்பெர்க் அழைப்பு விடுத்திருந் தார். காணொளி வெளியாகிய அக்கப் பல் இஸ்ரேல் துறைமுகத்துக்கு திருப்பி விட்டதாகவும், கப்பலில் இருந்தவர்கள் அவரவர் நாட்டிருக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவமானது, காசா  மக்களுக்கு ஐ.நா. அனுப்பி வைக்கும் நிவாரணப்பொருட்களைக் கூட கொடுக்க விடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தன்னார்வலர்களின் கப்பல்களில் நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் போது குண்டு வீசித் தாக்கு தல் நடத்துகிறது.  கடந்த மே மாத துவக்கத்தில் சுதந்தி ரக் கடற்படையின் மனிதாபிமானக் கப்பலான ஹாண்டலா மனிதா பிமான உதவிகளை காசாவிற்கு கொண்டு சென்றபோது சர்வதேச கடல்  எல்லையில் டிரோன் மூலம் குண்டு வீசி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.