tamilnadu

img

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி

நாமக்கல், ஜூன் 13- குலக்கல்வி முறைக்கு தள்ளும் புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கெதிராக  நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். நாமக்கல் உழவர் சந்தை அருகே உள்ள தனியார் மண்டபத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், ‘தேசிய கல்விக் கொள்கையை நிரா கரிப்போம்! மாநில கல்வி உரிமை பாது காப்போம்’ என்ற தலைப்பில் மாநில சிறப்பு பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. முன்னதாக, உழவர்  சந்தையிலிருந்து மாணவர் சங்கத்தி னர் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, விண்ணை முட்டும் முழக்கங்களுடன் மண்டபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ஜி.கே.மோகன் வரவேற்றார். அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு துவக்க வுரையாற்றினார். ‘கல்வி வளாகத்தில் நாம்’ என்ற தலைப்பில் மத்தியக்குழு  உறுப்பினர்கள் க.பிருந்தா, சி.மிரு துளா, மாநில துணைத்தலைவர்கள் பா.ஆனந்த், தே.சரவணன் ஆகியோர் உரையாற்றினர். எதிர்கால கடமைகள் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி உரை யாற்றினார். அகில இந்திய துணைத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி நிறைவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.