tamilnadu

இந்தியாவின் பதிலளிப்பை நாடாளுமன்றமே வழிநடத்த வேண்டும்; பாஜகவின் பிரச்சாரம் அல்ல!

இந்தியாவின் பதிலளிப்பை நாடாளுமன்றமே வழிநடத்த வேண்டும்; பாஜகவின் பிரச்சாரம் அல்ல!

“என் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம்  அல்ல, குங்குமம்” - இந்த வார்த்தை களின் மூலம் பிரதமர் மோடி, சிந்தூர் பிரச்சாரத்திற்குப் பிறகான தனது பிரச்சார பாணி யை வரையறுத்துக்கொண்டார். நாடு எதிர்கொண்டி ருக்கும் கடுமையான சவால்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவரோ அல்லது அவரது அரசாங்கமோ வேறு என்ன செய்திருக்க முடியும்? வெளிப்படைத்தன்மை யும் சுயபரிசோதனையும் இந்த அரசாங்கத்தின் பலமாக ஒருபோதும் இருந்ததில்லை. தனிநபர் வழிபாட்டு ராஜதந்திரம் மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை உத்தி, பிரதமரை மையக் கதாபாத்திரமாக முன்னிறுத்துவதையே பெரிதும் சார்ந்துள்ளது. இது ஒத்திசைவான ராஜதந்திரத்தைப் பின்பற்றுவதைவிட தனிநபர் வழிபாட்டை வளர்ப்பதற்கான வெளிப்படை யான முயற்சியாகத் தோன்றுகிறது. வெளியுறவுக் கொள்கையின் முதன்மை அம்சமாக பிரதமரின் ‘ஆளுமையை’ நிலைநிறுத்துவது என்பது வழக்கமான ராஜதந்திர செயல்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளது. இது நிறுவப்பட்ட ராஜதந்திர மரபுகளிலிருந்து தெளிவான முறிவைக் குறிக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வரலாற்று அடிப்படைகள் வரலாற்று ரீதியாக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் உள்நாட்டு அடித்தளங்களில் வேரூன்றியுள்ளது: அதன் வலுவான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நெகிழ்வுத்தன்மை, மதச்சார் பின்மை, கூட்டாட்சி உந்துதலால் இயக்கப்படும் வேற்று மையில் ஒற்றுமை எனும் மரபு, சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான உறுதிப்பாடு ஆகியவையே அந்த அடித்தளங்கள். இந்தக் கொள்கைகள் நாடு களின் சமூகத்தில் இந்தியாவின் நிலையை உயர்த்திய அடிக்கல்லாக அமைந்தன. பன்முகத்தன்மை கொண்ட மக்களின் சம குடியுரிமையை அடிப்படை யாகக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை, இந்தியக் குடியரசை வரையறுக்கும் அடையாளமாக இருந்து வருகிறது. பாரம்பரியத்தின் அழிவு துரதிர்ஷ்டவசமாக, இந்த மரபு இப்போது குறை மதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரின் செல்வாக்கை மையப்படுத்திய, தனிநபரால் வழி நடத்தப்படுகிற ராஜதந்திரம், முறையான மற்றும் கொள்கைப்பூர்வமான வெளியுறவுக் கொள்கைக்கு மாற்றாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இந்த அணுகுமுறை நிலைநிறுத்த முடியாதது - குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அதன் உலகளாவிய அந்தஸ்து பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்டது, காலனித்துவ எதிர்ப்பு தேசிய சுதந்திரப் போராட்டத்தில் அடித்தளம் கொண்டது மற்றும் ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக அதன் பரிணாம வளர்ச்சியில் அடித்தளம் கொண்டது. இந்த மரபிலிருந்து தங்களை விலக்கிக்கொள்வது இந்துத்துவா சக்திகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தத்தின் மரபணுக்களின் பகுதியாகும். பாதுகாப்புக் குறைபாடு பற்றி கமுக்கமான ஒப்புதல் பஹல்காம் படுகொலைகளைத் தொடர்ந்து, அரசாங்கம் இறுதியாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது “பாதுகாப்புக் குறைபாடு” நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஒப்புதல் மிகவும் கமுக்கமான முறையிலும் மிகவும் தாமதமாகவும் வந்தது. இப்போதும் கூட, அந்தக் குறைபாட்டின் தன்மை மற்றும் நோக்கம் குறித்து அரசாங்கம் தெளிவாக விவரிக்கத் தவறிவிட்டது. பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், சிங்கப்பூரில் ஒரு பாதுகாப்பு உரை யாடலின் இடையே பேசுகையில், நான்கு நாள் மோதலின்போது விமானங்களின் இழப்பை ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அவர் மேலும் விவரங்களை வழங்கவில்லை. இத்தகைய போகிற போக்கிலான விளக்கங்கள் தோல்வியின் முழு அளவையும் தெரிவிக்கத் தவறிவிட்டன. 370-ஆவது பிரிவு ரத்து மற்றும்  அதன் விளைவுகள் மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகால ஆட்சி  குறிப்பாக 370-ஆவது பிரிவினை ரத்துசெய்ததும், அதன் விளைவுகளும் - தற்போதைய நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு புறக்கணிக்க முடியாது. 370-ஆவது பிரிவினை ரத்து செய்தது மற்றும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த உடன்பாட்டின் அடிப்படையான வரலாற்று உண்மைகளை நிரா கரிப்பது என்பவை, ஜம்மு-காஷ்மீரின் இந்திய ஒன்றியத்துடனான ஒருங்கிணைப்பின் மரபைக் குறைமதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளன. மிகவும் கடுமையாக, இது எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை எதிர்ப்பதில் ஜம்மு-காஷ்மீர் மக்கள்  ஆற்றிய முக்கிய பங்களிப்பை அழித்துவிட்டது. பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகான அரசின் நிலைப்பாடு பஹல்காமுக்குப் பிறகு இது இன்னும் தெளி வாகவே வெளிப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு முழுவதும் பஹல்காம் கொலைகளுக்கு எதிராக மக்கள் வீதி களில் இறங்கியபோது, மக்கள் ஒற்றுமையின் இந்த சக்திவாய்ந்த வெளிப்பாடு மிகவும் நேர்மறையான வளர்ச்சியாக இருந்த போதிலும், ஒன்றிய அர சாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்படவோ அல்லது பாராட்டப்படவோ இல்லை. மாறாக, காஷ்மீர் மக்களையே  குற்றம்சாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன - இது அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் மற்றும் உண்மையான சித்தாந்த நோக்குநிலையை வெளிப்படுத்துகிறது. அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்திய அரசாங்கங்களின் இரு தரப்பையும் இணைத்துச் செல்லும் அணுகுமுறை, இப்போது ஆழமாகப் பிளவுபடுத்தும் ஒன்றால் மாற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் உண்மையான தன்மை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை இராணுவ மோதலால் மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அமைதிக்கான உண்மையான விருப்பம் நோக்கத்தின் தெளிவிலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜ தந்திரம் ஆகியவை தனித்த முயற்சிகள் அல்ல; அவை உள்நாட்டுக் கொள்கைகளின் நீட்சிகளாகும். கடந்த 11 ஆண்டில் நடந்த வளர்ச்சிப் போக்கு கள் - அதிகரித்துவரும் வகுப்புவாத அணிதிரட்டல்; மற்றும் ஜனநாயக மற்றும் சிறுபான்மை உரிமை களின் அரிப்பு ஆகியவற்றின் அடையாளமாகஉள்ளன. வெறுப்புக் குற்றங்களின் ஆவணப்படுத்தல் பஹல்காம் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக நடந்துள்ள 184 வெறுப்புக் குற்றங்களை, ஒரு சிவில் உரிமைகள் குழுவின் உண்மை அறியும் அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்கள் முஸ்லிம்களை பொதுவாகவும்; காஷ்மீரிகளை குறிப்பாகவும் குறிவைத்து தடையின்றித் தொடர்ந்தன. சர்வதேச அரங்கில்  இந்தியாவின் நிலைப்பாடு பஹல்காம் கொலைகள் மற்றும் எல்லைக்கு அப்பால் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களின் பரந்த செயல்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான முழுமையான ஆவணப்படுத்தலின் பற்றாக்குறையால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் முன் வைப்பு மேலும் பலவீனமடைந்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு பாகிஸ்தானின் நோக்கங் களைப் பற்றி நம்பிக்கை ஏற்படலாம் என்றாலும், சர்வ தேச கருத்தை நம்பவைப்பதற்கு மிகவும் தெளிவான ஆதாரங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. முன்னாள் தளபதியின்  தெளிவான பேச்சு போர் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல்  மனோஜ் நரவனே, மிகவும் சரியான கருத்தைக் கூறி யிருக்கிறார். அதாவது “போர் என்பது காதல் காவியம் அல்ல. அது நீங்கள் தயாரித்திடும் பாலிவுட் படம் கிடையாது. இது மிகவும் தீவிரமான விஷய மாகும். அறிவற்றவர்களால் போர் நம்மீது திணிக்கப்பட லாம் என்ற போதிலும், நாம் அதனை உற்சாகப் படுத்தக்கூடாது” என்று கூறி, அதற்கெதிராக நாம் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார். அதே  சமயத்தில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை கள் நடத்தப்படுவதே விருப்பமான பாதையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். எந்த பலனும் இல்லை ராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, பஹல்காம் சம்பவம் குறித்து இந்திய அரசாங்கத் தின் நிலைப்பாட்டை வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில், இந்த நாடு களில் எதுவும் இந்தியாவின் உடனடி அண்டை நாடுகள் அல்ல. மேலும் இந்த ராஜதந்திர முயற்சி, “என் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல, குங்குமம் என்ற பிரதமரின் கூற்றுக்கும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்ற அறிவிப்புக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆனால் இவ்வளவு தாமதமான ராஜதந்திர தொடர்பு எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது(?) என்பது, பாகிஸ்தான் சர்வதேச நிதியத்திடமிருந்து (IMF) 1 பில்லியன் டாலர் கடனையும், உலக வங்கி யிடமிருந்து 40 மில்லியன் டாலர் உதவியையும் - எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றதிலிருந்து தெளிவாகிறது. இஸ்ரேல் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசாங்கத்தைத் தவிர, வேறு எந்த நாடும் இந்தியாவின் நிலைப் பாட்டை ஆதரிக்கவில்லை. இந்த எதார்த்தத்தை மறுப்பது யாருக்கும் உதவாது.  சிந்து நதிநீர் ஒப்பந்தம் பல பத்தாண்டுகளாக இருந்துவரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக திடீரென அறிவிக்கப் பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கியது. உல களவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லை தாண்டிய நதிநீர் பகிர்வுக் கொள்கை, மேல் மற்றும் கீழ்  நதிக்கரை மாநிலங்களின் உரிமைகளை ஒப்புக் கொள்கிறது. பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு வழிவகுக்காது. நடைமுறையில், நதியின் ஓட்டத்தைத் தடுக்க இந்தியாவிடம் நீர்த்தேக்க அணைகள் எதுவும் கிடையாது. மேலும் அரசாங்கம் நீரியல் தரவுகளை (hydrological data) வெளியிடுவதை மீண்டும் தொடங்கவில்லை. வெள்ளமோ அல்லது வறட்சியோ ஏற்பட்டால், பாகிஸ்தானிய விவசாயிகளும் பொது மக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர, இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ உள்ள மக்களுக்கு எதிரானது அல்ல. பயங்கரவாதி கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்; அதற்கான நட வடிக்கைகள் மக்களுக்கு எதிரானது அல்ல; அது இந்திய மக்களாக இருந்தாலும் சரி, அல்லது பாகிஸ்தானிய மக்களாக இருந்தாலும் சரி. பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றினால் அது ஒருபோதும் நேர்மறையான விளைவுகளைத் தராது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் உத்திகள் ஓர் ஒருங்கிணைந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்திட வேண்டும். சிறப்பு அமர்வு ஏன் முக்கியம்? இந்தக் காரணத்தினால்தான், தற்போதைய நெருக்கடியின் அனைத்து அம்சங்களையும் விவாதித்திட, இருக்கின்ற சூழ்நிலையைத் தெளிவு படுத்திட நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பதினாறு கட்சிகள் கூட்டாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி, அத்தகைய கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தன. தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை ஒட்டுவேலை தீர்வுகளால் சமாளிக்க முடியாது. இப்போதும் கூட, பிரதமர் மோடியை போர்க்காலத் தலைவராக சித்தரிக்கும் ஆயிரக்கணக்கான கட்-அவுட்கள் மற்றும் பதாகைகள் நாடு முழுவதும் தொடர்ந்து காணப்படுகின்றன. இவ்வாறு மோதலை அரசியல்மயமாக்குவது குறித்து நம் கவலைகளை இந்தியத் தேர்தல் ஆணையத்தை சந்தித்தபோது தெரிவித்தோம். தேர்தல் காரணங்களுக்காக நடத்தப்படும் உள்நாட்டுப் பிரச்சாரம் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ‘இந்தியா ஒரு போர்வெறி கொண்ட நாடு’ என சர்வதேச அரங்கில் நாம் சித்தரிக்கப்படக் கூடும். மர்ம முடிச்சுகளை அவிழ்த்திடுக! இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையிட்ட மர்மம் தொடர்பாக மோடி அரசாங்கம் விளக்கிட வேண்டும்.  இது இரு நாடுகளுக்கும் இடையேயான விவகாரங்களில் வெளிப்புற மத்தியஸ்தை எதிர்ப்பதையே நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும். நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்தி, ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுத்து, அன்றாட நிர்வாகத்தில் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை மீட்டெடுத்திட இப்போது ஒரு முயற்சியை தீவிரமாகத் தொடங்க வேண்டும். தற்போதைய சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள அது ஒன்றுதான் நம் முன் உள்ள அர்த்தமுள்ள ஒரே பாதையாகும். ஜூன் 4, 2025 தமிழில்: ச.வீரமணி