பள்ளிக் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கல்
சுகாதாரத் துறைக்கு குவியும் பாராட்டு
நீண்ட காலமாக பிறப்புச் சான்றி தழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும் எடுக்க முடியாமல் தவித்து வந்த, பின்தங்கிய குக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதாரத் துறை ஏற்பாட்டில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு காரணமான சுகாதாரத் துறையினரை பலரும் பாராட்டி வரு கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊராட்சி பெத்தநாச்சி வயல் பகுதி பின் தங்கிய குக்கிராமம் ஆகும். இப்பகுதி பெற்றோர்கள் போதிய கல்வி அறிவு பெறாத மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால், தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்து விட்ட னர். இந்நிலையில், ஊமத்தநாடு ஊராட்சி, பெத்தநாச்சிவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) மூகாம்பிகை, ஆசிரியை நாகூர் மாலா ஆகியோர் கோரிக்கையின்படி, மருத்துவர் ஸ்ரீநிதி முன்னிலையில், 15 மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் திங்கள்கிழமை பள்ளியில் வழங்கப்பட்டது. ஊமத்தநாடு சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், பெத்தநாச்சிவயல் கிரா மத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து 15 மாணவர்களுக்கான பிறப்பை ஆதாரங்களின் அடிப்படை யில், பதிவு செய்து, அதன் பிறகு பள்ளி யில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாண வர்களுக்கு பள்ளிகளுக்கே நேரில் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்ப டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், இதே கிராமத்தைச் சேர்ந்த சில குழந்தைகளை, வீட்டி லேயே பிரசவித்த காரணத்தால் சுகா தாரத் துறையால் அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு நீதி மன்றம் மூலம் விண்ணப்பித்து அல்லது வருவாய் கோட்டாட்சியர் மூலம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வழங்கப் படும் எனக் கூறப்படுகிறது. பெற்றோர்களுக்கு போதிய வழி காட்டுதல், பொருளாதார வசதி இல்லாத நிலையில், மாவட்ட நிர்வா கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு, வீடு தேடி சென்று பதிவு செய்து, பள்ளியில் பிறப்புச் சான்றிதழ் வழங்கிய சுகாதாரத் துறை யினரை பலரும் பாராட்டி வருகின்ற னர்.