tamilnadu

தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள்

தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள்

Tnpsc குரூப் 2, 2ஏ, மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் மாதிரி தேர்வுகளுடன் கூடிய கலந்துரை யாடல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 12ஆம் தேதியில் இருந்து டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை பயிற்சி மையத்தின் ஒருங்கி ணைப்பாளர் ந.வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் அடுத்தடுத்து வெளியிடவிருக்கும் அறிவிக்கையில் உள்ள TNPSC குரூப் 2, 2ஏ, 4 ஆகிய தேர்வுகளுக்கு  டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் கட்டணம் இல்லா மல் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியை அளிக்க உள்ளோம். புதிதாக TNPSC ‌போட்டித் தேர்வு களுக்குப் பயிற்சி பெற விரும்பும்  மாணவர்களுக்கு  இந்தப் பயிற்சி  வகுப்புகள் வெற்றிக்கு பெரிதும் பயன்படுவதாக அமையும். மாண வர்கள் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளை பெறு வதற்கு வழிகாட்டியாக பொதுத் துறை யில் உள்ள இன்ஷியுரன்ஸ் துறை அலு வலர்களை உள்ளடக்கிய அகில இந்திய இன்ஷியுரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண் டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லா மல் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வு களில் வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பில் வெளிவந்துள்ள 70,000 காலிப்பணியிடங்கள் இவ்வாண்டில் (2025) நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே tnpsc யின் குரூப் 2, 2ஏ, மற்றும் 4 காலிப்பணியிடங்க ளுக்கு மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் வகுப்பானது உடனடியாக தொடங்கப்பட உள்ளது.  இம்மையம் தொடர்ந்து அதிகப்படியான வெற்றியாளர்க ளைஉருவாக்கி வரும் கலந்துரையாடல் வகையிலான வகுப்பானது (Test with discussion method), மாண வர்களின் திறமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எல்லாத் தகவல்களும் குழு விவாதத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளும் மாணவர்களிடையே பகிரப்படுகிறது. வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாண வர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம். சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து (கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக் காரன் தெருவில் அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் 12.4.2025 சனிக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும். தேர்வெழுத முழு தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வ துடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடி யிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த 63698 74318, 9524318207, 97906 10961, 94446 41712 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.