புதுக்கோட்டை, செப்.9- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைதுசெய்தனர். கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 233 விசைப்படகுகளில் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், எம்.ஹபீப் ரகுமான் படகில் சென்ற கே.ஜெரோன் (24), ச.கெம்ப்லஸ்(56), பி.மெக்சன் (29), எம்.ரவி(19) ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துள்ள னர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேரையும் கைதுசெய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரித்து வருகின்றனர்.