நவீன் பட்நாயக்குடன்
திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிஜு ஜனதா தள கட்சியின் தலைவரும் ஒடிசாவின் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கை திமுக நிர்வாகி கள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென் மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவ டிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.
தொடர்ந்து, தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள நவீன் பட்நாயக்கை திமுக எம்.பி., தயாநிதி மாறன் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தென்மாநில எம்.பி.க்கள் கூட்டுக் குழுவுக்கு பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை கோரினர்.