நாகர்கோவில், மே 22- குமரி மாவட்டத்தில் தங்கி ஏராளமான வடமாநில தொழி லாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இதை யடுத்து வெளிமாநில தொழி லாளர்களை சொந்த ஊரு க்கு அனுப்ப மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை மேற்கொ ண்டது. குமரி மாவட்டம் முழுவ தும் வடமாநில தொழிலா ளர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இவர்களில் சொந்த ஊர் செல்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ண ப்பித்தனர். மேலும், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பு மாறு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக கடந்த 17ஆம் தேதி பீகாருக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. அதில் 957 பேர் பயணம் செய்த னர். இந்நிலையில் மேலும் இரண்டு சிறப்பு ரயில்கள் மூலம் வடமாநில தொழிலா ளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடு க்கப்பட்டது.
அதன்படி, கன்னியாகு மரியிலிருந்து ராஜஸ்தான், நாகர்கோவிலிலிருந்து ஜா ர்கண்ட் ஆகிய மாநில ங்களுக்கு தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப திட்ட மிடப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை வெள்ளியன்று நடைபெற்றது. ராஜஸ்தான் செல்பவர்களுக்கான மரு த்துவ பரிசோதனை நாக ர்கோவில் ஸ்காட் கிறிஸ்த வக் கல்லூரியில் நடை பெற்றது. இதையடுத்து ஏரா ளமான வடமாநில தொழி லாளர்கள் குடும்பத்தோடு அங்கு வந்தனர். அவர்க ளுக்கு மருத்துவ பரிசோ தனை செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கன்னியாகுமரி ரயில் நிலை யத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும் 575 பேரும் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
இதேபோல ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்லும் 634 தொழிலாளர்களுக்கு நாக ர்கோவில் எஸ்எல்பி பள்ளி யில் பரிசோதனை நடந்தது. இதன் பின்னர் இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலை யத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரயிலில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக நாகர்கோவி லிலிருந்து மருத்துவ பரிசோ தனைக்கு பிறகு கன்னியா குமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு வட மாநில தொழிலாளர்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு பேருந்தில் சென்ற தொழிலா ளர்களிடம் நாகர்கோவில் ரயில் நிலையம் செல்வதற்கு பேருந்து கட்டணமாக ரூ.25 வசூல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி ரயில் நிலையம் செல்வதற்கு ரூ.40 பேருந்து கட்டணமாக வசூ லிக்கப்பட்டது. இதில் சில தொழிலா ளர்கள் பேருந்து கட்ட ணத்தை செலுத்துவதற்கு பணம் இல்லாமல் தவித்த னர். இதைப் பார்த்த அங்கி ருந்த சில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு பணம் கொ டுத்து உதவினர். நாகர்கோ வில் மாநகராட்சி சார்பில் வடமாநில தொழிலா ளர்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் இலவசமாக வழ ங்கப்பட்டது.