10 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி; திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்!
சென்னை, ஜன. 5 - ‘உலகம் உங்கள் கையில்’ என்ற கருப்பொருளின் கீழ் கல்லூரி மாண வர்களுக்கு மடிக்கணினிகள் (லேப்டாப்) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் திங்கட்கிழமை (ஜன.5) தொடங்கி வைத்தார். 10 லட்சம் கல்லூரி மாணவ - மாண வியர்க்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திரை நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, கார்த்திக், மணிகண் டன் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் உட்பட ஏராள மான கலந்து கொண்டனர். சிறப்பு அம்சங்கள் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருட்கள் முன்ன தாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடை முறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலை முறைக்குப் புதிய சாளரம்” என அமை யும் செயற்கை நுண்ணறிவு மென் பொருளான Perplexity Proவின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
