ஏப்ரல், மே மாதங்களில் கேரளம் முழுவதும் கொண்டாட்டங்கள்
இரண்டாவது பினராயி விஜயன் அரசின் நான்காம் ஆண்டு விழாவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது. உள்ளாட்சி மட்டத்திலிருந்து மாவட்ட மற்றும் மாநில மட்டங்கள் வரை பரந்த அளவிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். முதல மைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்கேற் பார். முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 21 ஆம் தேதி காசர்கோட்டில் தொடங்கி மே 21 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் முடிவடையும். இதில், அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்ற பயனாளிகள் மற்றும் முக்கிய பிர முகர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தும் மாவட்ட அளவிலான கண் காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் கண்காட்சி ஒரு வாரம் நீடிக்கும். கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய் யப்படும். மாநில அளவிலான பொது நிகழ்ச்சியும் உள்ளது. இளைஞர் நலன், கலாச்சாரம், மகளிர் மேம்பாடு மற்றும் எஸ்சி-எஸ்டி துறைகளின் தலைமையில் இதற்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும். உயர்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைமையில், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட தொழில் முறை மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படும், மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் தலைவராக வும், மாவட்ட ஆட்சியர் பொது ஒருங்கி ணைப்பாளராகவும் இருப்பார்கள். அவர்கள் நிகழ்ச்சிகளை வழிநடத்துவார்கள். வழிகாட்டு தல்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைக ளுக்கான பொறுப்பு தலைமைச் செயலாளரி டம் ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான கூட்டங்கள் :
ஏப்ரல் 21–காசர்கோடு, 22–வயநாடு, 24–பத்த னம்திட்டா, 28–இடுக்கி, 29–கோட்டயம், மே 5–பாலக்காடு, 6–கொல்லம், 7–எர்ணாகுளம், 12–மலப்புரம், 13–கோழிக்கோடு, 14–கண்ணூர், 19–ஆலப்புழா, 20–திருச்சூர், 21–திருவனந்த புரம்.
மாநில அளவிலான கூட்டங்கள் :
மே 3–இளைஞர் நலன்– கோழிக்கோடு, 4–பெண்கள் மேம்பாடு–எர்ணாகுளம், 10–கலாச்சாரம்–திருச்சூர், 11–உயர்கல்வி–கோட்டயம், 17–தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் - திருவனந்தபுரம், 18–பட்டியல் சாதி/பழங்குடியினர் மேம்பாடு - பாலக்காடு.