tamilnadu

img

வாழ்வாதாரத்தை காக்க நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கிடைக்குமா?

மீன் தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் மனு

நாகர்கோவில், மே 22- கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளிக்கப்பட்டுள்ள மனு விபரம் வருமாறு:  கன்னியாகுமரி மா வட்டத்தில் 48 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. இந்த மீனவர் கிராமங்களில் வாழ்கின்ற அனைவரும் மீன்பிடித் தொழிலை மட்டு மே நம்பி வாழ்ந்து வரு கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சில தூண்டில் வளை வுகளும் இருக்கின்றன. மேற்படி மீன்பிடி துறை முகங்களில் துறைமுகம் அமைந்துள்ள ஊர், மீன வர்கள் மற்றும் வேறு மீன வர் கிராமங்களில் உள்ள வர்களும் அங்கு சென்று மீன் விற்பனை செய்யவோ, நாட்டு படகுகளை நிறுத்தி வைக்கவோ அனுமதி இல்லை. இதனால் துறை முகம் மற்றும் தூண்டில் வளைவு இல்லாத மீனவர் கிராமங்களில் உள்ள மீன வர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  ஒவ்வொரு நாளும் ஏற்ப டும் கடல் சீற்றத்தாலும், இயற்கை பேரிடர்களாலும் தொழில் செய்ய முடியாத  சூழ்நிலையில் மீனவர்களின்  வாழ்வாதாரம் இக்கால கட்டங்களில் கேள்விக்கு றியாகி பரிதவிக்கும் நிலை உருவாகி உள்ளது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிந்த ஒன்று. 

மேற்படி மீனவர் கிரா மங்களில் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை மட்டு மின்றி அவர்கள் வாழ்ந்துவ ரும் வீடுகளும், தொழில் உப கரணங்களும், உடமை களும் அழிந்து கொண்டி ருப்பதை நமது அரசும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மீனவர் கிரா மங்களையும், வாழ்வாதா ரத்தையும் பாதுகாத்திட மீன வர் அமைப்புகளின் வற்புறு த்தலுக்கு பின்பு பல மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவ ர்கள் அமைக்க நிதி ஒது க்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி போ ர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் தரமானதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.  இந்த காலத்தில் மீன்பி டித் தொழில் செய்ய முடியாத அளவிற்கு பெரும் காற்றும் கடல் சீற்றமும் ஏற்பட்டு வரு கிறது. நாட்டுப்படகு மீனவர்க ளின் மீன்பிடித் தொழிலை செய்வதற்கு வசதியாக நான்கு மீன்பிடித் துறைமு கங்களை பயன்படுத்தி இக்காலத்திற்கு சில நிபந்த னைகளுடன் நாட்டுப்படகு மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது மீனவர்களின் வாழ்க்கைக்கு பேருதவியாக அமையும் என்பதை புரிந்து மீன் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கோவிட் 19 தொற்று காரணமாக வா ரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனு மதிக்கப்பட்டது. மேலும் சில ஊர்களுக்கு 4 நாட்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழ ங்கப்பட்டுள்ளது. இவை களை மாற்றி தொற்று பர வாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடை ப்பிடித்தும் மீனவர்களின் பொருளாதார சூழ்நிலையை சீர் செய்திடவும், வறுமை, பசி, பட்டினியில் இருந்து பாதுகாத்திடவும், வார த்தில் 5 நாட்களும் மீன்பி டித்தொழில் செய்திடவும், பிற்பகல் ஒரு மணி வரை  தொழில் செய்ய அனும தித்தும் மீனவர்களின் நலன்  காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.  இந்த மனுவை மாவ ட்டத் தலைவர் கே.அ லெக்ஸாண்டர், பொதுச்செ யலாளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன் உட்பட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து அளித்தனர்.