மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து ஏஎஸ்பி பலி
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கோண்டா-எர்ரபோரா சாலையில் உள்ள டோண்ட்ராவில் திங்க ளன்று மாவோயிஸ்டுகளால் வைக்கப் பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்ததில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவ ட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே உயிரி ழந்தார். மேலும் பல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த குண்டு வெடிப் பில் காயமடைந்தனர். சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் சர்மா ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே கொல்லப்பட்டதை உறுதிப் படுத்தியுள்ளார்.