tamilnadu

சென்னை மற்றும் தேனி முக்கிய செய்திகள்

கொரோனா கொத்து கொத்தாக பாதிப்பு

சென்னை, ஜூன் 2- தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊர டங்கு தொடங்கிய முதல் நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. இரண்டாவது நாளான செவ்வாய்க் கிழமையும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி யுள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாயன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், பலி எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள் ளது.

காசநோய் பரிசோதனை முகாம்

நத்தம், ஜூன் 2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூ ராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணி யாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலக வளா கத்தில் நடந்தது. மாவட்ட காசநோய் துணை இயக்குநர் ராமச்சந்திரன் தலை மை வகித்தார்.செயல் அலுவலர் சர வணக்குமார், நல கல்வியாளர் பால சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார், துப்புரவு ஆய்வாளர் சட கோபி முன்னிலை வகித்தனர். முகாமில் தூய்மைப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காசநோய் பரிசோதனை செய் யப்பட்டு பின்னர் சளி பரிசோதனைகளும் செய்யபட்டது.

ஆட்சியரிடம் மனு

தேனி, ஜூன் 2- கம்பம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என விவ சாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறப்பட்டிருப் பதாவது:- கொரோனா தொற்று நடவடிக்கை காரணமாக கம்பம் உழவர் சந்தை கடந்த 28- ஆம் தேதி அடைக்கப்பட்டது.அங் குள்ள 110 விவசாயிகள் நகராட்சி நிர்வா கம் மூலம் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு செய் யப்பட்டு போக்குவரத்துக்கு உள்ளிட் டவை இயங்கி வரும் நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. வாடகை வாகனம் மூலம் விற்பனை செய்து வருவது தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அரசு வழங்கும் ஆலோசனையுடன்,  தக்க பாதுகாப்போடு கம்பம் உழவர் சந்தை யில் விவசாயிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .எனவே கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விற்ப னைக்கு அனுமதிக்க வேண்டும். இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

குண்டும், குழியுமான முக்குளம் சாலை

விருதுநகர், ஜூன் 2- மதுரை-அருப்புக்கோட்டை செல்லும் வழி யில் உள்ளது காரியாபட்டி. இங்கிருந்து மீனாட்சி புரம் விலக்கு வழியாக அ.முக்குளம் 15 கி.மீ தூர மாகும். இந்தச் சாலை, விருதுநகர், மதுரை, சிவ கங்கை ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக் கும் முக்கியச் சாலையாகும். இந்தச் சாலை வழி யாக, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, நரிக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருச்சுழி, இராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு எளிதில் சென்று வர முடியும். தற்போது இந்தச் சாலை மிக வும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலகள் ளங்குளம்-மீனாட்சிபுரம் விலக்கு வரை உள்ள சாலையா குண்டும், குழியுமாக உள்ளதால், பேருந்தகள், கனரக மற்றும் இரு சக்கர வாக னங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.  முழு ஊரடங்கிற்கு முன்பு சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூறப் பட்டது. ஆனால் சீரமைப்புப் பணிகள் தொடங் கப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பேருந்துகள், வாகனங்கள் பெருமளவில் இவ்வழி யாக செல்லத் தொடங்கியுள்ளன. மழைக் காலம் தொடங்கும் முன்பு சாலையை இரு வழிச்சாலை யாக மாற்ற வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.

தாய், மகள் கைது

தேனி, ஜூன் 2- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா மனைவி நிர்மலாதேவி. இவருக்கும் இவர் வீடு அருகே குடியிருந்து வரும் மாயா என்பவருக்கும் இடையே வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு க.விலக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது . இதை விசாரனை செய்த காவல்துறையினர் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுங்கள். வழக்குத் தொடரும் வரை வீட்டு வேலை செய்ய கூடாது எனக் கூறி உள்ளனர். இதற்கிடையில் மாயா மீண்டும் வீட்டு வேலை யை தொடங்கியதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிர்மலா தேவி, அவரது தாயார் பண்ணீர் செல்வி ஆகியோர் மண்ணென்னையுடன் தேனி ஆட்சியர் அலுவ லம் முன்பு தற்கொலை செய்ய திட்டமிட்டு வந்த னர். தாய், மகள் இருவரையும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்திய காவல்துறை யினர் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.